--> -->
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் வெகுசன ஊடக மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டார்.
பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்எஸ் "மொன்ட்ரோஸ்" கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஏப்ரல்,03)விஜயம் செய்தார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யுரி மடேரி அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (மார்ச், 28)சந்தித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற மாற்றுத் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுக் கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த திங்களன்று இடம்பெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) மூன்றாவது வருடாந்த கல்வியாண்டுக்கான அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் ,22) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாது. இந்நிகழ்வு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (பெப்ரவரி , 15) சந்தித்தார்.
இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கொழும்பு லைட் ஹௌஸ் கெலியில் இடம்பெற்ற நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
ஐ. நா. அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நேற்றையதினம் (பெப்ரவரி,04) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த மேஜர் எச்.டபிள்யூ.டீ.ஜெயவிக்கிரம மற்றும் சார்ஜன் எஸ்.எஸ். விஜேகுமார ஆகிய வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் இலங்கை இராணுவத்தினரால் கையேற்கப்பட்டன.
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று துறைமுக படகுகளை இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கையளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் ரங்களவில் நேற்று (ஜனவரி,25) இடம்பெற்றது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகிர சுகியாமா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,25 ) சந்தித்தார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி, 16) சந்தித்தார்.
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.
மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சில் இன்று (ஜனவரி, 01) காலை பாரம்பரிய நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குழந்தைகள், மனைவிகள், பெற்றோர் ,இரத்த உறவுகள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் சேவையில் உள்ள முப்படை வீரர்கள் ஆகியோருக்கு நன்மை பயக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.