--> -->
Tamil
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்திருந்த 12வது பாதுகாப்பு சேவைகளின் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி - 2023 எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அண்மையில் வெலிசரயில் உள்ள கொழும்பு சுப்பர் கிராஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் சரத் கொட்டகம அவர்களினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கற்கை நெறிகளில் பங்கேற்பாளர்களுக்கான விருந்தினர் விரிவுரை அண்மையில் (மார்ச் 22) கொழும்பு 03, காலி வீதியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் ஆமை முட்டைகளை பாதுகாத்து 2600க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு இலங்கை விமானப்படை தளத்தின் 63வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் புதிய இராணுவ இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி ஐஜி அவர்கள் தனது கடமைகளை இன்று (மார்ச் 21) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள், கொழும்பு 3 இல் அண்மையில் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இரண்டாம் தளபதியாக வியாழக்கிழமை (மார்ச் 16) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தினறால் அண்மையில் முனை, பருத்தித்துறை, சுப்பர்மடம் மற்றும் சாக்கோட்டை ஆகிய கரையோரப் பகுதிகளில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தினரால் பெரியமடு முஸ்லிம் பாடசாலை மற்றும் தச்சன்மரடமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகை பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அண்மையில் பெரியமடு முஸ்லிம் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (DSCSC) மாணவர் அதிகாரிகள் இன்று (மார்ச் 17) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்தனர்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு ரிடா ஜூலியானா மன்னெல்லா இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை நடத்திய விஜயம் மேற்கொண்டு, தரித்திருந்து, தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்து பறிமுதல் செய்யும் பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சி பாடநெறியில் பங்குபற்றிய குழுவிற்கான சான்றிதழ்கள் அண்மையில் (மார்ச்10) வழங்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு அலியாவளை தமிழ் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை வழங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை இராணுவம் (SLA) அண்மையில் நிறுவியது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்க ஆகியோர் நேற்று (09 மார்ச் 2023) இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
அண்மையில் தேசிய மாணவர் படையணியின் ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணம் வழங்கும் விழாவின் போது சிறந்த பங்களிப்பை வழங்கிய பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் (ஆணையற்ற அதிகாரிகள்) சேவைகளை பாராட்டி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நேற்று (மார்ச் 08) இராணுவத் தலைமையகத்தில் அவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு பொனி ஹோர்பக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (மார்ச் 07) சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ட்ஜகார்யன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இணைந்து தொகுத்த “இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை” என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (பெப்ரவரி 27) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் செயற்பாடுகளுக்காக Ideal Motors நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட 03 விசேட மாதிரிக் கார்கள் (All-Terrain Vehicles - ATV) நிறுவனத்தின் தலைவர் திரு.நளீன் வெல்கமவினால் கடற்படைத் தளபதியிடம் (பெப்ரவரி 22) கையளிக்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் அதன் பணியாளர்களுக்கான தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதல் எனும் தொனிப்பொருளிலான தலைமைத்துவ விரிவுரையொன்று முன்னெடுக்கப்பட்டது.