--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்களுக்கு மேலும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு

வடமேல் மாகாணத்தில் வாழும் போர்வீரர்களின் நாளாந்த பணிகளை இலகுபடுத்தும் வகையில் ஆறு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான உதவிக் கருவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் குருநாகல் லிச்சவி மண்டபத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.  




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்டு திறப்பு

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

6.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடந்படையினரால் கைது

பருத்தித்துறை நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலியில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு பாராட்டு

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பு நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலாளரின் விஷேட பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த பல பரிமாண நடவடிக்கையின் தலைவருமான திரு. எல்-காசிம் வான் கலந்து கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்கா லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்காவின் லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சி ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

கிளிநொச்சியில் உள்ள படையினர் பிராந்தியத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு அண்மையில் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சியில் வசிக்கும் தகுதியுடைய 42 குடும்பங்களுக்கு வாரயிறுதியில் (பெப்ரவரி, 05) கண்ணன் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சுகாதார அதிகாரிகளின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், ஆகையால் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை கைப்பற்றினர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ் போதனா வைத்தியசாலையில் படையினரால் இரத்த தானம்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட இரத்த இருப்பின் குறைவினையடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 ஆவது படைப் பிரிவு படையினரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட இராணுவத்தின் பெண் வீராங்கனைகள் அடங்கலான பாதுகாப்புக்குழு நாட்டிலிருந்து பயணம்

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய குடியரசு தினத்தன்று மறைந்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு நினைவஞ்சலியுடன் மரியாதை

இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

10 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்களை அங்கவீனமுற்ற 167 படை வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு

ரணவிரு சேவா அதிகார சபை அங்கவீனமுற்ற 167 படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் செயற்கை கால்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காலி கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணிகளில் கடற்படையினர் ஈடுபாடு

காலி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.