--> -->
அம்பகமுவ மற்றும் தனமல்வில பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவை பொலிஸாரின் மேற்பார்வை கீழ் அழிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் ஜேக்கப், இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பிராந்திய தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன் போது அவர் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பலுக்கான உதிரிபாகங்களை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற ‘76 வது செஸ் மியோர் நினைவு தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில்’ இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று இராணுவத்துக்கும், நாட்டுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இராணுவத்தினரால் திருத்தி அமைக்கப்பட்ட 12 லேண்ட் ரோவர் ரக வாகனங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
Tamil
கொவிட் - 19 பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் வவுனியா பிரதேசத்தில் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாலியில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாம், பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் செயற்பாடுகள், வாகன பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை மேற் கொண்டமைக்காக ஐ.நா.அமைதி காக்கும் பணிகளின் படைத் தளபதியிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.
வவுனியாவில் உள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, 100 கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சகல மருத்துவ வசதிகளும் கொண்ட புதிய இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றி அமைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் அன்மையில் ஒப்படைக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை கொவிட்- 19 தொற்றாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றியமைத்து அதனை சுகாதார அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர்.
இரண்டு ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைபயிற்சி கப்பல்கள், மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்து, இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்களை மேற்கொண்டன.
பண்டாரவளை, தோவ அம்பதாண்டேகம மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்தில் பயன்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவும் ஒரு தொகை நன்கொடை பொருட்கள் நன்கொடையாளர்களினால் இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகள், படை முகாம் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கழிவுகளையும் குப்பைகளையும் பயன்படுத்தி 160,000 கிலோ கிராம் சேதன பசளையை உற்பத்தி செய்தனர்.
சிலாவத்துறை, கொண்தம்பிட்டி, மன்னார் மற்றும் அரிப்பு ஆகிய கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 370.6 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 294.1 கிலோகிராம் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தனமல்வில பிரதேசத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கையினை அதாவது இலங்கை சிங்க படையணியின் படைவீரர்கள் அன்மையில் சுற்றிவளைத்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 வது பிரிகேட் படைவீரர்கள், பண்டாரவளை பிரதேசத்தின் தோவ பகுதியில் உள்ள வெவேகொட மலைத்தொடரில் பரவிய காட்டுத் தீயினை வனவள துறையினருடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடலில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் தமது வீரர்களுக்கு ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது.
குண்டசலை மகாமேவுனவ பெளத்த நிலையம், சுகாதார பிரிவு| அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.