--> -->
இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு படையினர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை அகௌரவப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
cynfq;fpYk; thOk; ngsj;j kf;fSld; ,ize;J ,yq;if tho; ngsj;ju;fSk; ngsj;j rkaj;jpd; mjp cd;dj rka tpohthd ntrhf; gz;bifia kpFe;j rkag; gw;Wld; nfhz;lhLfpd;wdu;.
Tamil
குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயத்திட்டங்க்களை வலுப்படுத்துவதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டினையும் நாட்டு மக்களினையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.
காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இன்னைந்து கொள்கிறேன்.
பொருளாதாரம், அரசியல்,சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து
சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
இன்று (30) பிற்பகல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது இந்திய பயணத்தை நினைவுகூரும் முகமாக உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் மாமரக் கன்று ஒன்றை நாட்டினார்.
இராணுவத்தின் பணிக்குழாம் அதிகாரியாக இந்தியாவில் பயிற்சி பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரே முகாமில் பயிற்சி பெற்ற இரண்டு நண்பர்கள் அரசியல் நண்பர்களாக இன்று மீண்டும் சந்தித்தனர். இது அரசியல் விடயங்கள் பற்றி பேசுவதற்கான சந்திப்பு அல்ல.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தமை எமது இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்பத்தை குறிப்பதாக உள்ளது என இந்திய ஜனாதிபதி தெரிவித்தார்.
வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (29) முற்பகல் புதுடில்லியில் சந்தித்தார்.
இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
வரலாற்றில் முதன்முறையாக அதிகாரத்திலிருக்கும் அரச தலைவர் பக்கச்சார்பற்று செயற்படுவதன் காரணமாக இம்முறை தேர்தலை நீதியாகவும் அமைதியாகவும் நடத்த முடிந்துள்ளதாகவும் அது ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டின் அடிப்படை அம்சமாகுமெனவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.