--> -->

பாதுகாப்பு செயலாளர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு விஜயம்

ஜூன் 03, 2019

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு விஜயமொன்றை (ஜூன், 01) மேற்கொண்டார்

இங்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களை, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுமங்கள டயஸ், வரையறுக்கப்பட்ட (இலங்கை) விமான மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் திரு. தம்மிக ரணதுங்க மற்றும் விமானப்படை மற்றும் வரையறுக்கப்பட்ட (இலங்கை) விமான மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

இவ்விஜயத்தின்போது. பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளை அவதானித்ததுடன், விமானப்படை தளபதி, விமான சேவைகள் நிறுவன தலைவர், மற்றும் அதன் அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.