--> -->

புதிய விமானாப்படைத் தளபதி நியமனம்

மே 29, 2019

இலங்கை விமானப்படையின் தளபதியாக எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை (மே,29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் இலங்கை விமானப்படையின் 17வது தளபதியாகும்.

கொழும்பு, விமானப்படைத் தலைமையகத்தில் இடம் பெற்றவிமானப்படை தளபதி மாற்றத்தை தெரிவிக்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வில், பிரியாவிடை பெறும் விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்கள் கலந்து கொண்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரியாவிடைபெறும் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கலுக்கு செவ்வாய் கிழமை (மே,28) முதல் அமுலுக்கு வரும்வகையில் நான்கு நட்சத்திர எயார் சீப் மார்ஷல் தரத்திற்கு ஜனாதிபதியினால் பதவியுயர்வு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது