--> -->

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மே 27, 2019

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. ரைஸ் ஹமீதுல்லா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (மே, 27 ) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அத்துடன் இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டிஜே கொடித்துவக்கு அவர்களும் கலந்து கொண்டார்.