--> -->

மாலைதீவில் இருந்து 179 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 29, 2020

179 இலங்கையர்கள் அடங்கிய மற்றொரு குழுவினர் மாலைதீவில் இருந்து மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூன்,29) வந்தடைந்தனர்.

இவர்கள்,கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் குறித்த நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டுக்கு வருகை தந்த இவர்களுக்கு,  சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் மத்தளை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைபடுத்தளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.