--> -->

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 28, 2020

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின்  பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். ( ஜுலை 28 )

சேவைக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பிய  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோவின் வெற்றிடத்திற்கே கெப்டன். விகாஸ் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் கெப்டன். விகாஸ் சூட் ஆகியோருக்கிடையில் இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பாதுகாப்பு உறவினை வலுப்படுத்தும் வகையில் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்குதல் என்பன  தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டன.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்  புதிய பாதுகாப்பு ஆலோசகரான கெப்டன் விகாஸ் சூட்   நீர்மூழ்கி யுத்த தளவாட பயன்பாட்டு துறையில் விஷேட நிபுணத்துவம் பெற்ற கடற்படை அதிகாரியும்  கடக்வஸ்லா தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவ அதிகாரியுமாவார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்  பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர்  அவர்,  பல்வேறு பதவிநிலை அதிகாரி மற்றும் ஆழ்கடல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா உட்பட பல  கப்பல்களில்  நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில்  இடம்பெற்ற  சந்திப்பினை  நினைவு கூறும் வகையில் இருவரும்  நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.