--> -->

பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 21 பேர் வீடு திரும்பினர்

ஜூலை 30, 2020

பூச மற்றும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 21 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், பூச கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 15 நபர்களும் கல்பிட்டிய கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஏனைய ஆறு நபர்களுமே இவ்வாறு தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை,  கடற்படை தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 79 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் உள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.