--> -->

வெலிகடை சிறைச்சாலையில் விரைவில் 15 அடி உயரமுள்ள புதிய வேலி

ஆகஸ்ட் 08, 2020

வெலிகடை சிறைச்சாலையில் 15 அடி உயரமுள்ள புதிய பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள பெண் பிரிவு பகுதியில் காணப்படும் பாதுகாப்பு சுவரின் மேலாக சட்டவிரோதமாக பொருட்கள் வீசப்படுவதைத் தடுக்கும் வகையில் குற்றிதத முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக நிர்வாக பிரிவுக்குப் பொறுப்பான சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள பெண் பிரிவு பகுதியில் காணப்படும் சுவரின் மேலாக சட்டவிரோத பொருட்கள், மொபைல் போன்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பன சில காலமாக தொடர்ந்து வீசப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.