--> -->

வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 579 ஆக அதிகரிப்பு

ஆகஸ்ட் 10, 2020

கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம், மூவர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,844 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மூவரில் இருவர் சேனபுர புணர்வாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஒருவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸினால் பாதிக்கப்பட்ட 254 பேர்  வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.