--> -->

பேஸ்புக் விருந்துபசாரம்: 20 இளைஞர்கள் கைது

ஆகஸ்ட் 10, 2020

பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் போதைப்பொருள் பாவித்ததன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 2.465 கிராம் ஹெரோயின், 13 கிராம் கேரள கஞ்சா மற்றும் 5 போதைப்பொருள் மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பண்டாரகம, தெஹிவளை, பாணந்துறை, தொடங்கொடை, யட்டியான, கடுவலை, பொரலஸ்கமுவ மற்றும் ஹொரண பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், மெலனிய பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.