--> -->

ஜனாதிபதி ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சு

ஆகஸ்ட் 12, 2020

இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவியேற்பு

பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினை இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகுல் மடுவ மண்டபத்தில் புதிய அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போதே இந்த நியமனம் வழங்கப்பட்டது.

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சமல் ராஜபக்ஷ, 'இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களில் ஒன்றான நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

இவர், 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் 19 ஆவது சபாநாயகராக கடமையாற்றியுள்ளார்.

மேலும் அவர், மகாவலி அபிவிருத்தி, விவசாய மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராகவும் துறைமுகங்கள், விமான போக்குவரத்து, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவம் அமைச்சராகவும் முன்னர் பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் முழுமையான விபரங்கள்