--> -->

தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஒக்டோபர் 15, 2020

2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது காணப்படும்  கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தரும் பொது மக்களின் வருகையை மட்டுப்படுத்தும் பொருட்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காகன அனுமதி பத்திரம் வழங்கல் மற்றும் புதுப்பித்தல்களுக்கான அனுமதி பாதுகாப்பு என்பன அமைச்சினால் மாத்திரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.