--> -->

மினுவாங்கொடை கொரோனா கொத்தனியில் 16 பேர் குணமடைவு

ஒக்டோபர் 16, 2020

வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 74 பேர்  நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,244 பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளான 68 பேர் மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,791.ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 365,859  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மாத்திரம் 6,543 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு,  படையினரின்  மேற்பார்வையின் கீழ் உள்ள 84 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,556 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். அவர்களில் ஏழு பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனைய 16 பேர் மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர்.

அத்துடன் இதுவரை  53,011 பேர்    தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறி உள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.