--> -->

இதுவரை 58,697 பேர் சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துள்ளனர்

ஒக்டோபர் 29, 2020

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 335 பேர் நேற்றைய தினம்  புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9, 205ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை சுய தனிமைப்படுத்தல் காலத்தைப்  பூர்த்தி செய்த 58,697 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  5,731 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் அந்நிலையை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இராணுவத்தினரால் மேற்பார்வை செய்யப்படும் 70 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,039 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை சுமார் 477,156 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் மாத்திரம்  7, 870 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசியச் ஏற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.