--> -->

தீகவாபி தூபியின் மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

நவம்பர் 11, 2020
  • ‘முஹுது மகா விஹாரையையும்’ பாதுகாப்பதாக பாதுகாப்பு செயலாளர்  உறுதியளிப்பு

தீகவாபி தூபியை மீள் நிர்மாண செய்வதற்கான அடிக்கள் நாட்டும் வைபவம் இன்று இடம் பெற்றது. அம்பாறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான  கௌரவ மஹிந்த ராஜபக்ஷ  தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல்லினை  நாட்டி வைத்தார்.

தீகவாபி தூபிக்கான மீள் நிர்மாணப் பணிகள் இந்த விகாரையின் விகாராதிபதி வண. மகாஓயா சோபித தேரரின் வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுகப்படவுள்ளது.

பாதுகாப்பு செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவும் கலந்து கொண்டார்.

புனித பௌத்த தளங்களில் ஒன்றான இத்தளத்தின் இடம் பெற்ற நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பிரதமர்  ராஜபக்ஷவினால் நாக மரம் ஒன்று  நடப்பட்டது.

"முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின்  உதவியுடன் தீகவாபி தூபிக்கான மீள் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இந்த தூபியின் புனர் நிர்மாணப் பணிகள் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள துறைசார் நிபுணர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொல்பொருள் ஆலோசனைகளுக்கமைய முன்னெடுக்கப்படவுள்ளன.

தீகவாபி அறக்கட்டளை நிதியத்திற்காக உள்நாட்டு, வெளிநாட்டு தனவந்தர்கள் மற்றும்  பக்தர்களிடமிருந்து   திரட்டப்படும்  நன்கொடை  மூலம் கிடைக் பெறும் நிதியிலிருந்து,  இந்த புனர்நிர்மாண பணிகளை  முன்னெடுக்க  எதிர்பார்க்கப்படுகிறது.

பதினாறு பெளத்த வழிபாட்டுத் தலங்களில் புனிதமான தலங்களில் ஒன்றாக புகழ்பெற்ற ‘தீகவாபி’, நீண்ட காலமாக எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகின்றமை தொடர்பாக இந்த விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மஹாஓயா  சோபிதா தேரரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்தே  இந்த தூபியின் புணர் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் தீகவாபி தூபியை புனர்நிர்மாணம் செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை இடைநடுவில் கைவிடப்பட்டன. எனினும் இம்முறை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த பண்டைய விகாரையின் புனர்நிர்மாணப் பணிகள்  திட்டமிட்டபடி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

தீகவாபி பெளத்த விகாரை மற்றும் அதனை அண்டிய தளம் என்பன சத்தாதிஸ்ஸ மன்னனினால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும்.

புத்த பகவான் இலங்கைக்கு தரிசித்த இடமாக புகழ்பெற்ற இந்த புனித தளம், உள்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பெளத்த சமய பக்தர்களினால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றது.

பின்னர் பிரதமர் ராஜபக்ஷ தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவ உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து புனித வழிபாட்டுத் தலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக  பாதுகாப்பு செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய  ‘முஹுது மகா விஹாரையை பார்வையிட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது முஹுது மகா விஹாரையின் தொல்பொருள் மதிப்பை  பாதுகாப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது  வண. மகா சங்கத்தினருடன்  இடம்பெற்ற கலந்துரையாடலில்  உடன் கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் குணரத்ன “முஹுது மகா விஹாரையின் நில அளவை கணக்கெடுப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதாகவும்  இதுதொடர்பில் இப்பிரதேசத்தின் வசிக்கும்  சமூகத்தினருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்

இந்த நிகழ்வில், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மஹாஓயா சோபித தேரர் உள்ளிட்ட  மகா சங்கத்தினர், கிழக்கு மாகாணம் ஆளுநர் அனுராதா யஹம்பத், வனவிலங்கு வளத்துறை இராஜாங்க  அமைச்சர் விமலவீர திஸ்நாயக்க, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் போராசிரியர் கபில குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சித்ரானி குணரத்ன, சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு)  ஆனந்த பீரிஸ், தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, தென்கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகே, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு படைகள்மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.