--> -->

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன

நவம்பர் 22, 2020

மன்னார் எருக்கலம்பிட்டி கரையோரத்தில் பொலிஸாருடன் இணைந்து  கடற்படையினர்  மேற்கொண்ட  தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும்  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 710கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும்  3 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

35 வயதுடைய சந்தேகநபர்கள்  எருக்கலம்பிட்டியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள், கேரள கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சுகாதார அறிவுறுத்தலுக்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.