--> -->

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

நவம்பர் 27, 2020

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை  இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள 4வது பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர்  கொழும்புக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.