--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 410 பேர் குணமடைவு

நவம்பர் 28, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 473 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,500 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்ட ஒருவரை தவிர அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும்.  இதற்கமை கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 138 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 63 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19,431 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 12,793 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 13,286 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 410 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட்-19  பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 97 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் கட்டார் நாட்டிலிருந்து 44 பேரும் இந்தியாவிலிருந்து 53 பேரும்  வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்  தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 5,088 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக  அதிகரித்துள்ளது.