--> -->

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

ஏப்ரல் 29, 2019

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளராக இன்று (ஏப்ரல், 29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார்.

புதிய பாதுகாப்பு செயலாளர் இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயம் செய்த அவர், புதிய பாதுகாப்பு செயலாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.