--> -->

கடற்படையினரால் கடலில் கடலாமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டது

பெப்ரவரி 22, 2021

கடலாமைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் 78 கடலாமைக் குஞ்சுகள் நேற்றையதினம் பானம கடற்பகுதியில் கடற்படையினரால் கடலுக்குள் விடுவிக்கப்பட்டது.

கடல் சார் சூழலின் உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்க உதவும் வகையில், அருகிவரும் கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் பிரதான குறிக்கோளுடன் கடல்சார் பாதுகாப்பு திட்டம் ஒன்றை இலங்கை கடற்படை நடைமுறைப்படுத்தி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், தென்கிழக்கு பிராந்திய கடற்படையின் பிரதி கட்டளைத்தளபதி, கொமடோர் நெவில் உபயசிரி  கலந்து கொண்டார்.