--> -->

மேலும் ஆறு இடங்கள் தனிமைப்படுத்தலில்

மே 11, 2021

இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும்  வகையில் மேலும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பிரதேசங்கள்  தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசமாக அறிவிக்கபடுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கு அமைவாக :

மாத்தறை மாவட்டம்       - உயன்வத்தை கிராம சேவகர் பிரிவு - உயன்வத்தை வடக்கு கிராம சேவகர் பிரிவு

மாத்தளை மாவட்டம்      - உட ஹபுவிட கிராம சேவகர் பிரிவு

கண்டி மாவட்டம்             - வலகம்பா  கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  திப்புத்த கிராமம்

                                                                 வலகம்பா  கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  கொஸ்கஸ்தன்ன  கிராமம்

புத்தளம் மாவட்டம்         - மெதகிரி மெடியன கிராம சேவகர் பிரிவ

 

இதேவேளை, தனிமைப்படுத்தல் உட்பட்டிருந்த குருணாகல் மாவட்டம் கும்புக் கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகட லுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது