--> -->

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஆகஸ்ட் 27, 2019

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (அகஸ்ட், 26) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, மேஜர் ஜெனரல் உரம்குமாரத் சுரேஷ் குமார் அவர்களின் தலைமையிலான பதினாறு பேர் கொண்ட அங்கத்தவ குழுவினர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், தேசிய பாதுகாப்பு கல்லூரி மாணவ அதிகாரிகளின் கேள்வி பதில் அமர்வு ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் கல்விச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.