--> -->

யாழ் ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 27, 2019

அண்மையில் இலங்கை கடற்படையினர் யாழ் வேலனி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் “ரட வெனுவென் எகட சிட்டிமு” எனும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைய இந்நிகழ்வு வேலனி சரஸ்வதி கல்லூரியில் (ஆகஸ்ட், 23 ) நடைபெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விழிப்புணர்வு நிகழ்வுகள், யாழ் பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கியதாக இம்மாதம் 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இளம் சந்ததியினருக்கு போதைப்பொருளின் தீய விளைவுகள் தொடர்பாக தெளிவூட்டி போதையற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் வழிகாட்டலில் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது