--> -->

புதிய இராணுவத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 03, 2019

புதிய இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டெம்பர், 03) சந்தித்தார்.

23வது இராணுவத் தளபதியாக அண்மையில் (ஆகஸ்ட், 21) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சுமூக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது, செயலாளர் புதிய இராணுவத்தளபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.