--> -->

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 20, 2019

இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் திரு. வினோட் கே ஜாகொப் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று  (செப்டம்பர், 20) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டனர்.