--> -->

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

ஜூன் 13, 2019

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் தனது நியமனக்கடிதத்தினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களிடமிருந்து இன்று (ஜூன், 13) பெற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது பாதுகாப்பு செயலாளர் அவர்கள் குறித்த நியமனக்கடிதத்தினை வழங்கிவைத்ததுடன், புதிய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் குலதுங்க அவர்களுக்கு தனது வாழத்துக்களையும் தெரிவித்தார்.