--> -->

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

ஜனவரி 14, 2020

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்காக பொது மன்னிப்பு காலத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 2020.2.5ஆம் திகதி முதல் 7 நாட்களை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது மன்னிப்பு காலம் 2019.9.30ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகாமல் சென்றவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக தாய் நாட்டிற்காக சேவையாற்றும் பொருட்டு முப்படையில் இணைந்து கொண்ட படைவீரர்களில் சிலர் பல்வேறு சிக்கல்கள் மற்றும் வசதியின்மை காரணமாக சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்றுள்ளனர்

இவ்வாறு சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைந்து தமது தாய் நாட்டிற்காக தொடர்ந்தும் சேவையாற்ற வாய்ப்புக்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய 2020.02.05ஆம் திகதி முதல் 07 நாட்களை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.