--> -->

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 04, 2019

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அவர்களிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.