--> -->
பாதுகாப்பு அமைச்சினது ஊழியர்களின் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்தொழில்நுட்பப் பிரிவின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் திருமதி செனவிரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
Tamil
இலங்கை இராணுவம் (SLA) நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து அண்மையில் நாவலப்பிட்டி நகரில் கழிவுநீர் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்ய உதவியது.
இலங்கை இராணுவம் (SLA) கிளிநொச்சியில் உள்ள பாடசாலை இளைஞர்களின் பூப்பந்து திறனை மேம்படுத்தும் வகையில் அண்மையில் வட மாகாண விளையாட்டு வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி கற்கைகள் பீடம் அதன் கணனியறிவு தொடர்பான சர்வதேச சஞ்சிகையின் (IJRC) தொகுதி 01ன், இதழ் 02 ஐ சமீபத்தில் வெளியிட்டது.
பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகமாக திரு. அனுர ரணசிங்க இன்று (ஆகஸ்ட் 15) நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் பெய்த அடை மழையை அடுத்து நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் பொது மக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மண் மேட்டை இலங்கை இராணுவப் படையினர் அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
சமகாலத்தின் புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப்.
இலங்கை கடற்படை அண்மையில் (ஆகஸ்ட் 03) ஆற்றின் நீரோட்டத்தை சீராக வைத்திருக்க ஜின் கங்கையின் அகலிய மற்றும் தொடங்கொட பாலத்தின் கீழ் அடைபட்டிருந்த குப்பைகளை நடவடிக்கை எடுத்தது.
ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் F42-44/61-64 பிரிவில் 44.20 மீ தூரத்தை பதிவுசெய்து இலங்கை இராணுவத்தின் தேசிய காவல்படையின் (SLNG) பாரா தடகள வீரர் கோப்ரல் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
திருமதி இந்திகா விஜேகுணவர்தன இன்று (ஆகஸ்ட் 03) முதல் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார், பேசாலை குருசபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வாலம்புரி சங்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி பிரதேச நோயாளர்களின் அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் இரத்த தானம் செய்தனர்.
இலங்கை கடற்படையினர் அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கடற்கரையை சுத்தம் செய்தனர்.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 15) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் புதன்கிழமையன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் கடமையாற்றும் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான படை வீரர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.
தியத்தலாவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் மரியாதை அணிவகுப்பு அண்மையில் விமானப்படை பிரதிப் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம்டி ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை கடற்படை (SLN) அண்மையில் (ஜூலை 04) காரைநகர் கால்வாயில் ‘டிராகன் படகு சம்பியன்ஷிப்’போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இலங்கை இராணுவம் (SLA) யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள குறைந்த வருமானமுடைய பாடசாலை மாணவர்களுக்கு 22 துவிச்சக்கர வண்டிகளையும், 50 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைக்கும் நிகழ்வொன்றை அண்மையில் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் நடத்தியது. கனடாவில் வதியும் திரு.ரஜிகரன் சண்முகரத்தினம் அவர்கள் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளார்.
இலங்கை விமானப்படை தனது யுத்த வீரர்களை நினைவு கூறி “போர்வீரர்கள் நினைவேந்தல் விழா 2022” நிகழ்வை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அனுசரணையின் கீழ் ஏக்கலையிலுள்ள அதன் பயிற்சி பாசறையில் விமானப்படை போர் வீரர் நினைவகத்தில் அண்மையில் நடாத்தியது.
நோயாளிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமாக கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.
புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கடற்படையினர் புத்தளம், அனவிலுந்தாவை பிரதேசத்தில் தெதுரு ஓயா ஆற்றில் அடைபட்டிருந்த குப்பைகளை அகற்றினர்.
இலங்கை கடலோர காவல்படைக்கு ஒரு தொகை தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன . இது கடலோரக் காவல்படையின் எதிர்கால பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.