--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினர் கும்புறுப்பிட்டி கிராமத்தில் புதிய நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தனர்

கிழக்கு (SFHQ-E) பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 17 ஆவது இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களினால் அண்மையில் கும்புறுப்பிட்டியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று  நிர்மாணிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி
வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் 'யுரகா' மற்றும் 'ஹிராடோ' ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படை தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை விமானப்படை இன்று (மார்ச் 03) தனது 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான இரண்டாவது குழு லெபனான் பயணம்

லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் இரண்டாவது குழு லெபனான் நோக்கி பயணமானது. இதற்கமைய, இலங்கை இராணுவத்தின் 2 அதிகாரிகள் மற்றும் 48 படைவீரர்கள் அடங்கிய 13 ஆவது பாதுகாப்பு குழு அமைதி காக்கும் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (27) லெபனானுக்கு புறப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படையின் சுழியோடல் ஆதரவுக் கப்பலான "ஐஎன்எஸ் நிரீக்ஷக்" திங்கள்கிழமை (பெப்ரவரி, 28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போர் வீரர்களுக்கு மேலும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு

வடமேல் மாகாணத்தில் வாழும் போர்வீரர்களின் நாளாந்த பணிகளை இலகுபடுத்தும் வகையில் ஆறு மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அங்கவீனமுற்றோருக்கான உதவிக் கருவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் குருநாகல் லிச்சவி மண்டபத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.  




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் சிகிச்சை நோயாளிகளுக்கான உள்ளக வார்டு திறப்பு

வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் புற்றுநோயியல் மற்றும் கண் மருத்துவ நோயாளிகளுக்கான உள்ளக வார்டு வசதி அப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் 2022 பெப்ரவரி 15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

6.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடந்படையினரால் கைது

பருத்தித்துறை நெல்லியடி பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 817 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலியில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு பாராட்டு

ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படைக்குழுவின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற பதக்க அணிவகுப்பு நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலாளரின் விஷேட பிரதிநிதியும், மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த பல பரிமாண நடவடிக்கையின் தலைவருமான திரு. எல்-காசிம் வான் கலந்து கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்கா லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்காவின் லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சி ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

கிளிநொச்சியில் உள்ள படையினர் பிராந்தியத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு அண்மையில் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சியில் வசிக்கும் தகுதியுடைய 42 குடும்பங்களுக்கு வாரயிறுதியில் (பெப்ரவரி, 05) கண்ணன் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சுகாதார அதிகாரிகளின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், ஆகையால் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை கைப்பற்றினர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ் போதனா வைத்தியசாலையில் படையினரால் இரத்த தானம்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட இரத்த இருப்பின் குறைவினையடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 ஆவது படைப் பிரிவு படையினரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.