பாதுகாப்பு செய்திகள்
வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை 4 மாதங்களில் 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது
இலங்கை கடற்படை, வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு (Onboard Security Team - OBST) வசதிகளை வழங்கும் சுயாதீன செயல்பாட்டை 2025 அக்டோபர் 03 அன்று தொடங்கியதுடன், கடந்த நான்கு (04) மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 323 நடவடிக்கைகள் மூலம், நேரடியாக 598,250.00 அமெரிக்க டாலர்களை ஈட்டி, அந்த அந்நியச் செலாவணி வருமானத்தை தேசிய நலனுக்காக வழங்க முடிந்தது. இது தொடர்பான ஊடக சந்திப்பு 2026 பிப்ரவரி 11 அன்று கடற்படை நடவடிக்கைகள் இயக்குநர் ஜெனரலின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
கொழும்பில் நடைபெற்ற ஈரான் தேசிய தின விழாவில்
பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசின் இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் 47வது ஆண்டு நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழா நேற்று (11 பெப்ரவரி) கொழும்பு, ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்றது.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சவூதி பாதுகாப்புத் பிரதி அமைச்சருடன்
இருதரப்பு கலந்துரையாடல்
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்தின் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் இளவரசர் Abdulrahman bin Ayyaf Al-Muqrin ஆகியோருக்கிடையிலான இருதரப்பு சந்திப்பு ஒன்று பெப்ரவரி 9 அன்று நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு என்பது
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சியில் (WDS) பங்கேற்பு - 2026
உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி - 2026 (World Defense Show - WDS 2026) நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் நடைபெற்றது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (SVU) வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) இன்று (பெப்ரவரி 10) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உள்நாட்டு விமான சேவைத் துறை பங்குதாரர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
உள்நாட்டு விமான சேவைகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (Retd), தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 10) நடைபெற்றது.
கொழும்பில் நடைபெற்ற சீன புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), நேற்று (9 பெப்ரவரி) கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்ற சீன புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
PDNA கருத்தரங்கில் தாங்குதிறன்மிக்க மீட்சிக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
‘டிட்வா’சூறாவளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் இறுதிப்படுத்தல் பணிமனை இன்று (பெப்ரவரி 9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
புனித தேவ்னிமோரி புனித தாதுக்கள் கண்காட்சியைப் பார்வையிட்ட சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்கள்
ராகம ரணவிரு சேவன, அபிமன்சல மற்றும் மிஹின்து செத் மெதுர ஆகிய நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் ஊனமுற்ற போர்வீரர்கள், கொழும்பு கங்காராமய விகாரையில் நடைபெறும் புனித தேவ்னிமோரி புத்தர்தாதுக்கள் கண்காட்சியை வழிபடுவதற்காக இன்று (08 பெப்ரவரி) வருகை தந்தனர்.
பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் PDNA கூட்டம் நடைபெற்றது
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில், அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post Disaster Needs Assessment – PDNA) தொடர்பான கூட்டம் பிப்ரவரி 6 அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. முக்கிய பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றன
2027ஆம் ஆண்டுக்கான புதிய திட்ட முன்மொழிவுகள் தயாரிப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்
2027ஆம் ஆண்டிற்கான புதிய திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (06 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (Retd) அவர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது.
இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இலங்கையில் வான் குதிப்பு (Skydiving) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கில் கூட்டம் நடைபெற்றது
இலங்கையில் வான் குதிப்பு (Skydiving) செயல்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பிப்ரவரி 05) ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
மாலத்தீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான மாலத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர், அதிமேதகு Masood Imad, இன்று (பிப்ரவரி 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இத்தாலி தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை
நிமித்தம் சந்தித்தார்
புதுடில்லியை தளமாக கொண்ட இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று (பிப்ரவரி 05) பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
HL-FRAC உயர்மட்டக் குழு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது
வெளிநாட்டு நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவான HL-FRAC இன் மற்றொரு கூட்டம், கடந்த வாரம் (பிப்ரவரி 03) பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை மீளாய்வு செய்வதுடன், அனைத்து நிவாரண நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்தும் தீர்மானமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கான வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக இன்று (04 பெப்ரவரி) கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டார்.
“இலங்கையை கட்டியெழுப்புவோம்”
பெருமைமிக்க வரலாற்றுத் தாத்பரியங்களின் மீது கட்டியெழுப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றாக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது
இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 4) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் “Rebuilding Sri Lanka” என்ற கருப்பொருளின் கீழ் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2026 சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்ட முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சில் கூட்டம்
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் உயர் மட்ட கூட்டமொன்று 03 பெப்ரவரி அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்கினார்.
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு பணிகளை
பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் மேட்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்யம் நோக்கில், பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோருடன் இன்று (02 பெப்ரவரி) அங்கு விஜயம் செய்தார்.



















