பாதுகாப்பு செய்திகள்
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்
இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.
நிக்கவரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ICU படுக்கையை நன்கொடையாக வழங்கியது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (MoD SVU) தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரதேசத்தின் தீவிர சிகிச்சை வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று (ஜனவரி 16) நிக்கவரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு ஒரு ICU படுக்கை அன்பளிப்பு செய்யப்பட்டது.
DSCSC யின் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) தளபதி, மேஜர் ஜெனரல் K. W. ஜயவீர, இன்று (ஜனவரி 16) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ தேசிய திட்டத்திற்கு இணங்க அனர்த்தத்திற்குப் பிந்திய தேவைகள் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல் குழு கூடியது
‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ எனும் தேசிய திட்டத்தை அரசாங்கம் ஜனவரி 13 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாவகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்கான ஆயத்தங்களை இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு மதிப்பாய்வு செய்தது
இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு, இலங்கையின் தகுதிவாய்ந்த அதிகாரி என்ற முறையில், பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் தலைமையில், ஜனவரி 12, 2026 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. மார்ச் 2026 இல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்காக இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு பங்குதாரர்களின் தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நிறைவு பெற்றது
13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நேற்று (ஜனவரி 12) பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.
யுத்த வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘வீரு சிசு பிரதீப்ப’ புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன
பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 13) நடந்த ஒரு நிகழ்வில் யுத்த வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு விரு சிசு பிரதீப்ப கல்வி புலமைப்பரிசில் வழங்கப்பட்டடன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு
ஆண்டியம்பலத்தைச் சேர்ந்த திருமதி Christeen Oellrich, இன்று (ஜனவரி 12) பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவுக்கு ஒரு சக்கர நாற்காலி ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு ICU படுக்கைகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் (MoD SVU) தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (ஜனவரி 09) அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு நான்கு (04) ICU படுக்கைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இது அங்குள்ள முக்கியமான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தில் உயர்மட்டக் குழு கூடியது
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) நேற்று (ஜனவரி 8) பாராளுமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார்.
அமெரிக்க தூதர் பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேரவுள்ள, அமெரிக்க தூதர் மேதகு Julie Chung, பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 8) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி
தலைமையில் கூடியது
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரைச் சந்தித்தார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி Upendra Dwivedi, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 7) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து சட்டம், 05 05 2025 தொடர்பான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் முகங்கொடுக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத் துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கில், குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து, இல 05 , 2025 சட்டம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 6) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அவற்றை மீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்த முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியில் இவை முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம் 372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு புத்தாண்டு தினத்தில் அதன் சமூக நலத்திட்டங்களை ஆரம்பித்தது
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU), அதன் தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிகா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இன்று (ஜனவரி 01) புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சமூகநல நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது.
புத்தாண்டு நிகழ்வில் கூட்டு முயற்சியின் அவசியத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று காலை (ஜனவரி 01) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புதிய ஆண்டின் பணிகள் ஆரம்பித்தல் மற்றும் அரச ஊழியர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.


















