பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு தலைமையக வளாக நிர்மாணம திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மதிப்பாய்வு

பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாண திட்டம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 1, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் விஷேட நடவடிக்கை

கொக்கல பகுதிக்கு தெற்கே கடற்கரையில் ஐந்து மீனவர்களை ஏற்றிச் சென்ற ஒரு இழுவைப் படகு இன்று (ஜூன் 28) காலை கவிழ்ந்தது, மேலும் அளுத்கமாவில் கரை ஒதுங்கிய மற்றொரு வெற்று டிங்கி படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உடனடி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவ பிரதம அதிகாரி பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் D K S K தோலகே USP nps psc, இலங்கை இராணுவத்தின் 67வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மனித கடத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இலங்கைக்கு மட்டுமல்ல, முழு சர்வதேச சமூகத்திற்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (US Institute for Security Governance) (ISG) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் வெவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தது. இதன்போது இராணுவ திறன் வளர்த்தல் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழு, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“நீங்கள் அளவிடாததை உங்களால் நிர்வகிக்க முடியாது”: இலங்கை 2025 ஆம் ஆண்டு உலக நீர்வரைவியல் தினத்தைக் கொண்டாடுகிறது

ஜூன் 24 அன்று வெலிசர வேவ்'ன் லேக் கடற்படை மண்டபத்தில் நடைபெற்ற 2025 உலக நீர்வரைவியல் தின ட(Hydrographic Day) கொண்டாட்டத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். "“Seabed Mapping: Enabling Ocean Action” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரமுகர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் நீர்வரைவியல் துறை நிபிணக்குகள் பலரும் கலந்துக்கொண்டனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

IOM மற்றும் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்தன

மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி (NAHTTF), புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்புடன் (IOM) இணைந்து, மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியான பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜப்பான் அரசாங்கத்தின் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுன் நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர் மற்றும் பாதிப்புக்குற்படக்கூடிய சமூகங்களுக்காக செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்;தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகின்றது. மனித விற்பனையின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுவதுடன் மனித விற்பனையென்று சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிப்பதை ஊக்குவிக்கின்றது. கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல், சிறுவர் தொழிலாளர் மற்றும் இணையவழி குற்றம் இடம்பெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு; மனித விற்பனையின் வடிவங்கள் குறித்து சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மனித விற்பனையை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்படக்கூடிய மக்களை சுரண்டலிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

Deputy Minister of Defence Graces IPSC Nationals 2025 Awarding Ceremony தேசிய IPSC 2025 துப்பாக்கி சுடும் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார் Deputy Minister of Defence, Major General Aruna Jayasekara (Retd), attended the awarding ceremony of the Sri Lanka International Practical Shooting Confederation (IPSC) Pistol Caliber Carbine (PCC) and Handgun Level III Nationals – 2025 as the Chief Guest. He was warmly welcomed by the President of the National Rifle Association of Sri Lanka (NRASL), Air Vice Marshal Ruwan Chandima. The prestigious event took place at the Wave’n Lake Navy Banquet Hall, Welisara, on Sunday (June 22). இலங்கை சர்வதேச IPSCயின் தேசிய துப்பாக்கிச் சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், விழாவிற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ருவன் சந்திம அன்புடன் வரவேற்றார். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) வெலிசர "வேவ்'ன் லேக்" கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது. The IPSC Nationals, held from June 18 to 22, drew the participation of 270 competitors representing 16 entities, including the tri forces, underscoring the event’s growing prominence in the national sporting calendar. ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற்ற IPSC தேசிய துப்பாக்கி சுடும் புத்தியில், முப்படைகள் உட்பட 16 கழகங்களை சேர்ந்த 270 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இது இப் போட்டியின் வளந்துவரும் முக

இலங்கை சர்வதேச IPSCயின் தேசிய துப்பாக்கிச் சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், விழாவிற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இலங்கை தேசிய துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ருவன் சந்திம அன்புடன் வரவேற்றார். இந்த விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) வெலிசர "வேவ்'ன் லேக்" கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒரு பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா தின நிகழ்ச்சி

11வது சர்வதேச யோகா தினம் (IDY) இன்று (ஜூன் 21) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது, இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ட்ரோன் செயல்பாடுகள் ஒழுங்குமுறை செயல்திறனை மேம்படுத்துதல் குறித்து பங்குதாரர்கள் பங்களிப்புடன் பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்

டிரோன் (Drone) செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட பங்குதாரர் கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் துரிதமாக வளர்ந்து வரும் ட்ரோன் துறையில் ஒழுங்குமுறை ஒத்திசைவு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ பிரதம அதிகாரி பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு
செயலாளரை சந்தித்தார்

ஓய்வுபெறும் இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 20) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிச்செல்லும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இலங்கையில் சேவையை நிறைவுசெய்து வெளியேறும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) Lieutenant Colonel Anthony C. Nelson, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 20) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு கரையோரப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத்
தடுக்க அரசு நடவடிக்கை

திருகோணமலை முதல் பொத்துவில் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்னைகளை தீர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப் போக்குவரத்துப் பிரிவு, ஜெமியோவில் துணிச்சலான விமானப் போக்குவரத்துப் பணியை மேற்கொள்கிறது

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் செயல்படும் இலங்கை  விமானப்படையின் விமானப் போக்குவரத்துப் பிரிவு, 2025 ஜூன் 14, அன்று மிகவும் மோசமான சூழலுக்கு மத்தியில் ஒரு முக்கியமான விபத்து மீப்பு (CASEVAC) பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த நடவடிக்கையில் ஒரு Mi-17 ஹெலிகாப்டர் (UNO 326P) ஜெமியோவிலிருந்து போரில் கடுமையாக காயமடைந்த மூன்று ஐ.நா. பணியாளர்களை அவசரமாகமீர்ப்புப்பணிகள் பணியை மேற்கொண்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வியட்நாம் தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இலங்கைக்கான வியட்நாம் சோசலிச குடியரசின் தூதுவர் மேதகு Mrs. Trinh Thi Tam, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 18) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் (DA) லெப்டினன்ட் கேர்ணல் மத்திவ் ஹவுஸ் (Lieutenant Colonel Matthew House) இன்று (ஜூன் 18) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

MOD சேவா வனிதா பிரிவினால் ஏட்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் அதிகளவு ஊழியர்கள் பங்கெடுப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) இன்று (ஜூன் 18) ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில், அதிகளவான பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். சர்வதேச இரத்த தானம் தினத்தையொட்டி SVU இன் தலைவர் Dr (திருமதி) ருவினி ரசிக்கா பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இன்று காலை அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு
ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

MRIA சுற்றளவு வேலி சேதங்கள் குறித்து
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கூட்டம்

மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) சுற்று வேலி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூன் 17) கூட்டமொன்று நடைபெற்றது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் யானைகள் ஊடுருவுவதால் சுற்று வேலிக்கு ஏற்படும் தொடர்ச்சியான சேதங்கள் குறித்து இந்த கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) உடன் இன்று (ஜூன் 16) கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் இம் முக்கிய பொதுப் போக்குவரத்து மையத்தில் மேட்கொள்ளப்படவிருக்கும் புதுப்பித்தல் திட்டத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அனர்த்த மீள்திறன் தொடர்பில் NDMP 2023–2030 திட்டம் தயார் செய்யப்படுகிறது

இன்று (ஜூன் 16) கொழும்பு Colombo City Centre, Courtyard by Marriott இல் நடைபெற்ற தேசிய அனர்த்த மீள்திறன் திட்டம் (NDMP) 2023–2030 தொடர்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஏற்பாடு செய்த இந்தப் கருத்தரங்கில் அரச, அரச சாரா நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த முக்கிய அங்கத்தவர்கள் இதில் கலந்துக்கொண்டனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2025 மூலோபாயத் திட்டம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு
மதிப்பாய்வு செய்கிறது

2025–2029 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக இன்று (ஜூன் 14) உஸ்வெட்டகையாவ மாலிமா மண்டபத்தில் ஒரு சிறப்புப் கருத்தரங்கு நடந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான திட்டத்தை வகுப்பது தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டது. பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் நிபுணர்கள் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு முன்னோக்கிய மற்றும் எதிர்கால மூலோபாய செயல்முறைக்கு அடித்தளம் அமைக்கவும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

NACWCயின் ஏட்பாட்டில் பாதுகாப்பு அமைச்சில் வீட்டுப் பாவனை இரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது

இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் (NACWC), வியாழக்கிழமை (ஜூன் 12) பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர மண்டபத்தில் வீட்டுப்பாவனை இரசாயனங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக கையாள்வது குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.