பாதுகாப்பு செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ - சியம்பலாகொட பாதையில் உயர்தர மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க இலங்கை இராணுவ 3 (V) கெமுனு பிரிவின் படையினர் உதவி
பனசுகம பகுதியில் உள்ள அக்குரெஸ்ஸ - சியபம்லாகொட பாதை வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தின் 613 காலாட் படையணியின் கெமுனு வாட்ச் (3 தொண்டர்) படையினர் உடனடி நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இராணுவத்தின் 8 SR படையினர் கடுகண்ணாவை நிலச்சரிவு மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்
பஹல கடுகண்ணாவையில் இன்று (நவம்பர் 22) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 8வது சிங்க படைப்பிரிவைச் (8 SR) சேர்ந்த வீரர்கள் உடனடி தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையைத் ஆரம்பித்துள்ளனர்.
நெலுவவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயர்தர மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு படையினர் உதவினர்
573 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை இலகுரக காலாட்படை (20 SLLI) படையினர், இன்று (நவம்பர் 22) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெலுவவில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காக நடவடிக்கை ஏடுத்துள்ளனர்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது NSA-நிலைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக
இலங்கை - இந்தியா இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தின.
மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட
முகாமைத்துவ முறையை பின்பற்ற பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
செயல்திறனை மேம்படுத்துவதற்கான முற்போக்கான நடவடிக்கையாக, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ (RBM) நிறுவனமயமாக்கல் குறித்த சிறப்பு அமர்வு கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் (MOD) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம் அனைத்து அரச நிறுவனங்களிலும் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்ததாக நடைபெற்றது.
தேசிய அனர்த்த தயார்நிலை திட்டங்களின் முன்னேற்றத்தை பாதுகாப்பு செயலாளர் மதிப்பாய்வு செய்தார்
இலங்கையின் அனர்த்த தயார்நிலை மற்றும் தணிப்பு முயற்சிகள் குறித்த உயர்மட்ட முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டம் இன்று (நவம்பர் 17) அனர்த்த முகாமைத்துவ பிரிவு காரியாலயத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), வானிலை ஆராய்ச்சி திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO), தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
ஆயுதப்படை நினைவு தினம் 2025 மற்றும் பொப்பி மலர் தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் பாதுகாப்பு செயலாளரும் பங்கேற்பு
81வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் நடத்தப்பட்டது.
அமெரிக்காவும் இலங்கையும் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் இன்று (நவம்பர் 14) பாதுகாப்பு அமைச்சில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு கிராமப்புற பாடசாலைகளுக்கு நன்கொடைகள் மற்றும் நூலக புணரமைப்பு மூலம் ஒத்துழைப்பு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU), இன்று (நவம்பர் 13) அனுராதபுரம் மாவட்டத்தில் இரண்டு கல்வி சார்ந்த திட்டங்களுடன் அதன் சமூக நல முயற்சிகளைத் தொடர்ந்தது.
சட்டவிரோத மீன்பிடித்தல் தடுப்பு நடவடிக்கைகளைத் எடுப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடித்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான உத்திகளை ஆய்வு செய்வதற்காக நவம்பர் 11 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணக் காணி விடுவிப்பு தொடர்பான கூட்டம் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
யுத்த வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்: ரணவிரு நலன் அமைச்சரவைப் பத்திரம் குறித்த கலந்துரையாடல்
ரணவிரு நலன் அமைச்சரவைப் பத்திரம் குறித்த உயர்மட்டக் கூட்டம் நேற்று (நவம்பர் 11) பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
கொழும்பில் நடைபெற்ற பிரித்தானிய நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டார்
கொழும்பு ஜாவத்தை மயானத்தில் உள்ள பொதுநலவாய போர்வீரர் கல்லறையில் இன்று (நவம்பர் 11) பிரித்தானிய நினைவு தினம் நினைவுகூரப்பட்டது. இரண்டு உலகப் போர்களின் போது உயிழந்த பொதுநலவாய நாடுகளின் வீரர்களின் துணிச்சலையும் உயர்ந்த தியாகத்தையும் இந்த நிகழ்வு நினைவு கூர்ந்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித விற்பனைக்கு எதிரான தேசிய மூலோபாய செயல் திட்டம்
குறித்த பாராட்டு விழா மற்றும் பாடநெறி
மனித விற்பனையை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பங்காளர்களை கௌரவிக்கும் விழா, மற்றும் தேசிய மூலோபாய செயல் திட்டம் (NSAP) 2026–2030 க்கான பாடநெறி ஆகியவை நேற்று (நவம்பர் 7) கொழும்பு மெரியட் கோர்ட்யார்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு செயலாளர் விரிவுரை நிகழ்த்தினார்
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (நவம்பர் 6) கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) மாணவர் அதிகாரிகளுக்கு விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார்.
இலங்கைக்கும் புனித வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் பொன்விழா கொண்டாடப்பட்டது
இலங்கை மற்றும் புனித வத்திக்கானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவு விழா நேற்று (நவம்பர் 4) கொழும்பு Galle Face ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.
யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்
ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்புரி தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பொது தின திட்டத்தின் கீழ், நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பிலும், வார இறுதியில் கேகாலையிலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்து சமுத்திரத்தில் சுனாமி மாதிரிப் பயிற்சி (IOWave 25) நாளை நடைபெறும்
"உலக சுனாமி விழிப்புணர்வு தினத்துடன்" இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்து சமுத்திர சுனாமி மாதிரிப் பயிற்சி (IOWave 25) நாளை (நவம்பர் 5) நடத்தப்படும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) வெளிச்செல்லும் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) வெளிச்செல்லும் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் ஜனக குணசீல நேற்று (நவம்பர் 3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இலங்கையின் காடுகளைப் பாதுகாக்க “வன சுரக்கும” கூட்டு செயல்பாட்டுப் பிரிவு அரம்பிக்கப்பட்டது
இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாப்பதையும் வனக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட "வன சுரகும கூட்டு செயல்பாட்டுப் பிரிவு" இன்று (நவம்பர் 3) சுற்றுச்சூழல் அமைச்சு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.
விசேட தேவைகளையுடைய குழந்தைகளில் கல்வி மற்றும் பராமரிப்பு விடயங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் SERRIC-க்கு விஜயம்
‘Senehasa’ கல்வி, வளம், ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் (SERRIC), என்பது பாதுகாப்பு அமைச்சு (MoD) மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபை (RSA) ஆகியவற்றால் நிறுவப்பட்ட விசேட தேவைகளுடைய குழந்தைகளை பராமரிக்கும் ஒரு நிறுவனமாகும். விசேட தேவைகளுடைய குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும், இது அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தொடர உதவுகிறது. SERRIC நிலையத்தில் முப்படை வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு வழங்கப்படுகிறது.
“போர்வீரர்களின் பெருமை” திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் யுத்த வீரர் தொழில்முனைவோர்களுக்கான ஒரு நிகழ்ச்சி
'தேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வணிக தொடக்கத் திட்டங்களுக்கான பாதுகாப்பு பங்களிப்பு' குறித்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது 'Mission Reboot' என்ற திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களை தேசிய பொருளாதார மேம்பாட்டில் தொழில்முனைவோர்களாக ஆக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் ஒரு அம்சமாகும்.
மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 02 காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
துருக்கியின் 102வது குடியரசு தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும்
பாதுகாப்புச் செயலாளரும் கலந்துக் கொண்டனர்
துருக்கி குடியரசின் 102வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கையில் உள்ள துருக்கி குடியரசின் தூதரகம், அக்டோபர் 29 அன்று கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது.

















