செய்திகள்
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்னாள் யுத்த வீரர் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ரணவிரு சேவா அதிகாரசபையினால் கல்வி புலமைப்பரிசில்கள் அன்பளிப்பு
முன்னாள் யுத்த வீரர்கள், உயிர்நீத்த மற்றும் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 06) ரணவிரு சேவா அதிகாரசபையினால் நடத்தப்பட்டது.
இங்கிலாந்து மன்னர் அதிமேதகு சார்ல்ஸ் III அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
இங்கிலாந்து மன்னர் அதிமேதகு சார்ல்ஸ் III அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (மார்ச் 05) கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டனர்.
தெற்குக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பலிருந்து உயிர் தப்பியவர்களை இலங்கை கடற்படை ஒன்றிணைந்த நடவடிக்கைக மூலம் மீட்பு
காலிக்கு தெற்குக் கடற்பரப்பில் கப்பல் ஒன்று விபத்துத்தில் சிக்கியியுள்ளதாக (Maritime Rescue Coordination Centre Colombo - MRCC) கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு புதன்கிழமை (மார்ச் 04) அதிகாலை 5.08 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பை தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து, தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்
இலங்கை விமானப்படை (SLAF) தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவையை நினைவுகூரும் வகையில், அதன் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு நிகழ்வை நேற்று (மார்ச் 03) நடத்தியது. அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தேசப்பற்றுடன் சேவையாற்றிய விமானப்படை வீரர்களின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டாடும் வகையில், அத்திடியவில் உள்ள 'Eagles’ Lakeside' மண்டபத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு பதக்கம் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பித்தனர்
இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்று (3 மார்ச்) இலங்கை விமானப்படை தலைமையகத்தில் பதக்கம் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போர்வீரர்களின் பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு பிரதி
அமைச்சர் கவனம் செலுத்தினார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் (ஓய்வு) தலைமையில் மார்ச் 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பொது தின நிகழ்ச்சி நடைபெற்றது.
‘டிட்வா’ புயலுக்குப் பிந்தைய கட்டமைக்கப்பட்ட தேசிய மீட்பிற்கான அடித்தளத்தை அமைத்தல் தொடர்பான PDNA கூட்டம் நடைபெற்றது
‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டு செயல்முறை (Post Disaster Needs Assessment – PDNA) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) தலைமையில், தேசிய திட்டமிடல் திணைக்களம் (NPD) மற்றும் முக்கிய தேசிய, சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.
தேசிய அனர்த்த மீட்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அனர்த்தத்திற்கு பிந்தைய நடவடிக்கைகள் தொடர்பான மதிப்பாய்வு கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
'தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு முகங்கொடுக்க பல பொது மற்றும் இராணுவ நிறுவனங்களில் விரைவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கை குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் குறைத்தாலும், தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைப்பிற்குள் முக்கியமான செயல்பாட்டு, கட்டமைப்பு மற்றும் நிறுவன இடைவெளிகளையும் இது வெளிப்படுத்தியது. நிறுவனமயமாக்கல், இடைவெளிகள் மற்றும் முறையான பலவீனங்களுக்கான சிறந்த நடைமுறைகளை அடையாளம் காணவும், அவசரகால பதிலளிப்பு அமைப்பிற்கான அடையக்கூடிய மேம்பாடுகளை உருவாக்கவும், பாதுகாப்பு அமைச்சு (MOD) இன்று (பிப்ரவரி 27) ஒரு விரிவான நடவடிக்கைக்குப் பிறகு மதிப்பாய்வை (AAR) கூட்டத்தை கூட்டியது.
வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்பு முன்னேற்றத்தை உயர்மட்டக் குழு மதிப்பாய்வு செய்தது
வெளிநாட்டு நிவாரண உதவி (பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) நேற்று (26 பெப்ரவரி) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் கொழும்பிலுள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் மீண்டும் கூடியது.
தனியார் பாதுகாப்பு சேவைத் துறையை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் அறிமுகம்
தனியார் பாதுகாப்பு சேவைத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், அதன் ஒழுங்குமுறைச் சட்டத்தை மேம்படுத்தும் விரிவான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க தொழில்முறைத் திறன், சேவைத் தரம் மற்றும் செயல்திறனை உயர்த்துவதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இந்தபுதிய கட்டமைப்பின் கீழ், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் கடுமையான பதிவு மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும். சேவைகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்படுவதுடன், பொறுப்புணர்வை உறுதிசெய்ய மேம்பட்ட கண்காணிப்பும் அமல்படுத்தப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி தரநிலைகள், திறனறிதல் தேவைகள் மற்றும் தொழில்முறை ஒழுக்கக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்வீரர்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல்
போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்நோக்கும் நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (24 பெப்ரவரி) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பு செயலாளர் ஆய்வுப் பயணம் மேட்கொண்டார்
அண்மையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி, மாலம்பேவிலுள்ளடர். நெவில் பெர்னாண்டோ போதானா வைத்தியசாலையின் (NFTH) நிர்வாகத்தை இலங்கை விமானப்படைக்கு (SLAF)க்கு ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (23 பெப்ரவரி) அந்நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணம் மேட்கொண்டார். இதன் போது, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவரை வரவேற்றார்.
சவூதி அரேபியாவின் ஸ்தாபக தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு
இலங்கையில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகம், அந்நாட்டின் 1727 ஆம் ஆண்டிலிருந்து 298 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூரும் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு, கொழும்பு ITC Ratnadeepa Hotel இல் நேற்று (20 பெப்ரவரி) ஒரு வரவேற்பு விழாவை நிகழ்த்தியது.
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சருடன்
இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
பெப்ரவரி 19 முதல் 21 வரை உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. "Web" Koehler, பெப்ரவரி 20 அன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்தார்.
ரஷ்யாவின் “தாய்நாட்டின் பாதுகாவலர் தினம்” விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்துகொண்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), நேற்று (பெப்ரவரி 19 ) கொழும்பு Cinnamon Life, City of Dreams ஹோட்டலில் நடைபெற்ற ரஷ்யாவின் “தாய்நாட்டின் பாதுகாவலர் தினம்” விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்வு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.“தாய்நாட்டின் பாதுகாவலர் தினம்” என்பது ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகளில் சேவை செய்த முன்னாள் வீரர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் போற்றப்படும் ஒரு விசேடமான நாளாகும்.
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று (பெப்ரவரி 19) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர், மேதகு Sandile Edwin Schalk, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (19 பிப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பொது தினத்தில் முன்னாள் படை வீரர்களின் நலனில் பாதுகாப்பு அமைச்சின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தபட்டது
பாதுகாப்பு அமைச்சில், இன்று (பெப்ரவரி 18) நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியின் போது, முன்னாள் படை வீரர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் உறுதியான அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தபட்டது. பொது தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற வளாகத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்தல்
தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று (17 பெப்ரவரி) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர், H. E. Wiebe De Boer, இன்று (17 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர், H.E. Dewi Gustina Tobing இன்று (17 பெப்ரவரி) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பாதுகாப்புச்
செயலாளரைச் சந்தித்தார்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களை இன்று (16 பெப்ரவரி) சந்தித்தார்.















