செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹேலிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி, வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 கையுறைகளை நன்கொடையாக வழங்கியது

இலங்கையின் ஓரு முன்னணி கையுறை உற்பத்தியாளரான டிப்ட் புராடக்ட்ஸ் பிஎல்சி (டிபிஎல்), நிறுவனம் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 50,000 பாதுகாப்பு கையுறைகளை நன்கொடையாக வழங்கியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகத்தின் புதிய இராணுவ ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்திரற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ ஆலோசகர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர, இன்று (டிசம்பர் 12) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு நிவாரண உதவிக்கான உயர்மட்ட தேசிய குழு பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் NDRSC களஞ்சியசாலைக்கு விஜயம் செய்தார்

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்திற்கு இன்று (டிசம்பர் 12) பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிவாரண உதவிகளின் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Platypus Link மற்றும் Texlin Global வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்தன

Platypus Link (Pvt) Ltd மற்றும் Texlin Global (Pvt) Ltd நிறுவனங்கள் சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கின.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க Blue Skies Aviation Solutions (Pvt) Ltd
விமான மசகு எண்ணெய்யை அன்பளிப்பு செய்தது

இலங்கையின் முன்னணி விமான சேவை வழங்குநர்களில் ஒன்றான Blue Skies Aviation Solutions (Pvt) Ltd, இலங்கை விமானப்படைக்கு ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள விமான மசகு எண்ணையை தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்காக அன்பளிப்பு செய்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர் பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ள
நிவாரணப் பொருட்களை அன்பளிப்பு செய்தனர்

கொழும்பு நாளந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு அமைச்சுக்கு ஒரு தொகை வெள்ள நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தனர். கல்லூரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்து இவற்றை கையளித்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக இராணுவத் தளபதி சிலாபத்திற்கு விஜயம்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி சிலாபத்தில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கள விஜயம் மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கு ரஷ்யா மனிதாபிமான உதவிகளை வழங்கியது

இலங்கைக்கு ரஷ்யாவின் மனிதாபிமான உதவி அன்பளிப்பு இன்று (டிசம்பர் 10) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெற்ற நிகழ்வொன்றில் கையளிக்கப்பட்டது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

DSCSC யின் கல்வி பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளர்
iPad களைப் வழங்கினார்

DSCSC பாடநெறி எண். 19 இல் பங்கேற்பாளர்களுக்கான விரிவுரையாற்ற அங்கு விஜயம் செய்த போதே பாதுகாப்புச் செயலாளர் இவற்றை வழங்கினார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் DSCSC இல் விரிவுரை நிகழ்த்தினார்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC)பாடநெறி எண் 19 இன் பங்கேற்பாளர்களுக்கு விரிவுரை நிகழ்த்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சூறாவளியினால் சேதப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை பழுதுபார்க்க
இலங்கை இராணுவத்தின் உதவி

அண்மையில் இலங்கையை தாக்கிய சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை அவசரமாக பழுபார்க்க இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தத்திற்கு பிந்தைய உதவிப் பணிகளில் இலங்கை இராணுவம் மும்முரம்

தேசிய அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தொடரும் வகையில், அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்ப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கு இலங்கை இராணுவம் பல மாவட்டங்களுக்கு படையினரை அனுப்பியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மீட்புப் பணிகளுக்கு உதவ மற்றொரு IAF MI-17V5 ஹெலிகொப்டர் இலங்கைக்கு வந்தது

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ மற்றொரு இந்திய விமானப்படை (IAF) Mi-17V5 ஹெலிகொப்டர் நேற்று (டிசம்பர் 09) நாட்டிற்கு வந்தடைந்ததாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவிக்கிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம் கொழும்பில் வெளியிடப்பட்டது

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய "நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி - அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை நான் விட்டுச் செல்ல மாட்டேன்" ("The Army Commander’s Promise to the Nation - I Shall Not Leave This War Behind to the Next Army Commander") என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்வு நேற்று (டிசம்பர் 09) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை அக்குரேகொடவில் உள்ள அதன் புதிய நவீன தலைமையக வளாகத்திற்கு மாரியது

இலங்கை கடற்படை அதன் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (DHQC) அதன் புதிய தலைமையகத்திற்கு இன்று (09 டிசம்பர்) அதிகாரப்பூர்வமாக மாறியது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்காக
உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது - HL-FRAC

சமீபத்திய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிநாட்டு நிவாரண உதவிகளைப் பெறல், ஒருங்கிணைத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்கான தேசிய அமைப்பை வலுப்படுத்துவதற்காக, கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) டிசம்பர் 08 அன்று கூடியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் கலந்துரையாடினார்

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு திறன் மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் வகையில், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீத் மைல்ஸ் இன்று (டிசம்பர் 08) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்த சீனா மனிதாபிமான உதவிகளை வழங்கியது

அனர்த்தத்திற்கு பிந்திய நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் அன்பளிப்பு செய்த ஒரு தொகை மனிதாபிமான உதவிப் பொருற்கள் இன்று (டிசம்பர் 08) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளை முப்படையினர் தீவிரப்படுத்துகின்றனர்

இலங்கை முப்படையினர், அனர்த்தத்திற்கு பிந்தைய நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் முன்னணிப் பங்காற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சமூகங்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், முக்கிய மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு மூலோபாய ரீதியான ஆதரவளிப்பதற்கும் முப்படைகளும் விரைவாகச் செயல்பட்டன. அத்துடன் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்கு திறமையான மற்றும் ஒருங்கிணைந்த சேவையை உறுதி செய்வதற்காக ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் அவர்கள் பெரும் பணியாற்றி வருகின்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளர் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண
விநியோக வசதிகளை ஆய்வு செய்தார்

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (டிசம்பர் 07) தேசிய அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நிவாரண நிலையத்தின் (DMC) அழைப்பு மையம் மற்றும் தேசிய அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு விஜயம் செய்தார்.