செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு பிரதி அமைச்கிரின் தலைமையில் கம்பஹாவில் பொது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

மக்களுடன் நேரடி தொடர்பையும் நெருக்கத்தையும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சு ‘பொது நாள்’ நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் மூலம் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள், மறைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்து, தீர்வு பெற எளிதான தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா. பணிக்காக 11வது இலங்கை விமானப்படை பிரிவு செல்லும் வேளை 10வது
விமானப்படை பிரிவு நாடு திரும்பியது

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் (MINUSCA) ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை விமானப்படையின் (SLAF) 11வது குழு கடந்த 21ஆம் (ஜனவரி) திகதி சென்றதுடன் அந்நாட்டில் ஒரு வருட சேவையை நிவர்த்தி செய்த 10வது விமானப்படை குழு நாடு திரும்பியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரண்டு ஓமான் மற்றும் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

ஓமான் ரோயல் கடற்படை மற்றும் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று (ஜனவரி 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

HL-FRAC கூட்டத்தில் ஆயுதப்படைகளின் ஆதரவு உட்பட பொறுப்புக்கூற லை
பிரதித் அமைச்சர் வலியுறுத்தினார்

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழு (HL-FRAC) தனது எட்டாவது கூட்டத்தை நேற்று (ஜனவரி 21) பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடத்தியது. வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், 2026 ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவம் லங்கா சவாரி 2026 ஆரம்பம்

இலங்கையின் முதன்மையான பல-கட்ட சைக்கிள் ஓட்டுதல் சுற்று போட்டியான லங்கா சவாரி 2026 இன் முதல் நிகழ்வு 2026 ஜனவரி 18 அன்று நிறைவுபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

DSCSC யின் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) தளபதி, மேஜர் ஜெனரல் K. W. ஜயவீர, இன்று (ஜனவரி 16)  பாதுகாப்பு பிரதி  அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில்  மரியாதை நிமித்தம்  சந்தித்தார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ தேசிய திட்டத்திற்கு இணங்க அனர்த்தத்திற்குப் பிந்திய தேவைகள் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல் குழு கூடியது

‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பத்தை     ஒருங்கிணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ எனும் தேசிய திட்டத்தை அரசாங்கம் ஜனவரி 13 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாவகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை
மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி பாதுகாப்புச் செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Srinivas Maddula, இன்று (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்கான ஆயத்தங்களை இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு மதிப்பாய்வு செய்தது

இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு, இலங்கையின் தகுதிவாய்ந்த அதிகாரி என்ற முறையில், பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் தலைமையில், ஜனவரி 12, 2026 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. மார்ச் 2026 இல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள எதிர்வரும் பரஸ்பர மதிப்பீட்டிற்காக இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் குழு பங்குதாரர்களின் தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நிறைவு பெற்றது

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2024/2025 நேற்று (ஜனவரி 12) பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யுத்த வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘வீரு சிசு பிரதீப்ப’ புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 13) நடந்த ஒரு நிகழ்வில் யுத்த வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு விரு சிசு பிரதீப்ப கல்வி புலமைப்பரிசில் வழங்கப்பட்டடன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாராளுமன்றத்தில் உயர்மட்டக் குழு கூடியது

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு (HL-FRAC) நேற்று (ஜனவரி 8) பாராளுமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமை தாங்கினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க தூதர் பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேரவுள்ள, அமெரிக்க தூதர் மேதகு Julie Chung, பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 8) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி
தலைமையில் கூடியது

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரைச் சந்தித்தார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி (Upendra Dwivedi), பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஜனவரி 7) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி Upendra Dwivedi, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜனவரி 7) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து சட்டம், 05 05 2025 தொடர்பான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது

குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் முகங்கொடுக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் சட்டத் துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கில், குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்து, இல 05 , 2025 சட்டம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 6) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் அவற்றை மீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்த முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட நிதி குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியில் இவை முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம் 372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.