பாதுகாப்பு செய்திகள்
இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையணியின் மாலி படைக்குழுவின் மேலதீக படையினருக்கு நம்பிக்கையினை வழுப்படுத்தும் ஐ.நா முன்பணி குழு
தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியமற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள் போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயர் நிலையினை மதிப்பீடு செய்தவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.
இலங்கை இராணுவ வீரர்களின் சேவைகளை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு இன்று (மார்ச் 21) விஜயம் மேற்கொண்டார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு இலங்கை இராணுவம் வழங்கும் பயிற்சி வசதிகளை மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்
இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.
மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இலங்கை இராணுவ வீரர்களின் இரத்ததான நிகழ்வு
கிழக்கு மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 100 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இரத்த தானம் செய்தனர்.
இராணுவத்தினரால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள் நிர்மாணிப்பு
அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளின் சாவிகள் கையளிக்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படையினர் மருத்துவமனைகளில் அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு உதவி
மருத்துவமனை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 மற்றும் 61 வது காலாட் படைபிரிவுகளின் படையினர் புதன்கிழமை (8) அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் சீராக பேணுவதற்கு அவசர உதவிகளை வழங்கினர்.
இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளினால் தமது அறிவினை பரிமாறிக் கொள்வதற்கான துறைசார் செயலமர்வு
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மற்றும் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பயிற்சி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ‘மனித உரிமைகள் நடமாடும் பயிற்சிக் குழு (MTT) மற்றும் கடல்சார் சட்ட நிறுவன திறன் உருவாக்கம் (ICB) தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் அண்மையில் இலங்கை விமானப்படையின் சீனக்குடா கல்லூரியில் நடத்தப்பட்டது.
லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு 14 வது இலங்கைக் குழு புறப்பட்டது
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14 வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.
பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – வீதிகள் அதற்கு மாற்று வழியல்ல
மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு 14 வது இலங்கைக் குழு புறப்பட்டது
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படை பணிக்காக உள்ள 14வது இலங்கை குழு, இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை லெபனானுக்கு வாழ்த்துக்களுக்கு மத்தியில் புறப்பட்டது.
பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
இந்திய கடற்படையின் ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2023 பிப்ரவரி 27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இராணுவ மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் அண்மையில் நடைபெற்றது
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்றது.
இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘விரு சிசு பிரதீப’ திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கிவைப்பு
உயிரிழந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் இராணுவ குடும்பங்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் இராணுவ சேவா வனிதா பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இராணுவத் தலைமையகத்தில் (பெப்ரவரி 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐ.நா. அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய
இலங்கை படைவீரரின் பூதவுடல் இலங்கைக்கு
ஐ.நா. அமைதிகாக்கும் படையின் மாலியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் மாரடைப்பால் இறந்த 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடல் புதன்கிழமை (பெப்ரவரி 22) பிற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடல் பேழை இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினரால் இராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.