செய்திகள்
மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டம்
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (ஆகஸ்ட் 12) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மனித விற்பனை
அபாயம் குறித்து தேசிய மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) அறிவுறுத்தியுள்ளது
இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து புதிய முறையில் மேற்கொள்ளப்படும் மனித விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள் தொடர்பில் மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை (2026-2030) பாதுகாப்புச் செயலாளரிடம் IOMனால் கையளிப்பு
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைமைத் தூதர் திருமதி. கிறிஸ்டின் பி. பார்கோ, மனித கடத்தலைக் கண்காணித்து மற்றும் எதிர்த்துப் போராடுவதற்கான 2026-2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை ஆகஸ்ட் 05 அன்று தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இலங்கைக்கு ரூ.400 மில்லியன் பெறுமதியான அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியது
சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேற்படி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது.
AEGIS LEXICON 2025 - பாதுகாப்பு சைபர் கண்காட்சி
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
பாதுகாப்பு அமைச்சசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு சைபர் கட்டளை (DCC), சமீபத்தில் (ஜூலை 29, 2025) அமைச்சு வளாகத்தில் AEGIS LEXICON 2025 - பாதுகாப்பு சைபர் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியது. ஆகஸ்ட் 03, 2023 அன்று நிறுவப்பட்ட DCC யின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வருடாந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இது டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களில் இலங்கையின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பொது தினத்தில் படை வீரர்களின் நலனுக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு
செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்
படை வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலன்புரி வசதிகள் தொடர்பில் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சு இன்று (ஆகஸ்ட்01) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயாகொந்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் பொது தின நிகழ்ச்சியை நடைபெற்றது.
பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ரெமி லம்பேர்ட், நேற்று (ஜூலை 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 98 வது ஆண்டு விழாவின் போது இலங்கை-சீன பாதுகாப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன
சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) நிறுவப்பட்டதன் 98வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு (ஜூலை 30) நடைபெற்றது.
தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியினால் கட்டாய உழைப்பு பயிற்சி திட்டத்திற்கு மனித கடத்தல் தொடர்பான பாடத்தொகுதி இணைப்பு
உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), தொழிலாளர் அமைச்சுடன் இணைந்து, கட்டாய உழைப்பில் கவனம் செலுத்தும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி இன்று (ஜூலை 30) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தொடங்கியது.
ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர் குடும்பங்களின் நலன் தொடர்பில் பொது நாளின் போது கவனம் செலுத்தப்பட்டது
ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர்களின் குடும்பத்தினரின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பொது நாள் நிகழ்ச்சியின் மூன்றாவது அமர்வு இன்று (ஜூலை 30) கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில்
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு
இலங்கையின் வலுப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 30) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை IDEF 2025 இல் பங்கு பற்றியதன் மூலம் துருக்கியுடனான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளது
உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான (IDEF 2025) என்ற 17வது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன், துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டு, துருக்கி ஆயுதப்படைகளினால் (TAFF) ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையானது விமானப்படையுடன் இணைந்து கடற்படையின் கடல்சார் செயற்பாட்டுச் சிறப்பினை வெளிப்படுத்தி திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025 (TRINEX - 25) ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது
‘திருகோணமலை கடற்படைப் பயிற்சி - 2025’ (TRINEX - 25) ஜூலை 22 முதல் 26 வரை திருகோணமலை துறைமுகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை கடல் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் நிறைவு விழா 2025 ஜூலை 27 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில் இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரலவில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர், பேச்சாளராக பிரிகேடியர்
பிரேங்க்ளின் ஜோசப் பதவியேற்றார்
பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மறைந்த அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரருக்கு பாதுகாப்பு செயலாளர் இறுதி அஞ்சலி செலுத்தினார்
அஸ்கிரி பீடத்தின் சியாம் பிரிவின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் இறுதிச் சடங்குகள் நேற்று (ஜூலை 24) கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் அரச அனுசரணையுடன் நடைபெற்றன.
ஆசிய ஆயத்தநிலை கூட்டுமுயற்சி செயலமர்வில் பிராந்திய மீள்தன்மை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்
கொழும்பி Cinnamon Life at the City of Dreams இல் புத்தாள்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற ஆசிய ஆயத்தநிலை கூட்டுமுயற்சி (Asian Preparedness Partnership (APP) செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சிறப்பு உரை நிகழ்த்தினார்.
ரணஜயபுர படை வீரர் வீட்டுத்திட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை
இப்பலோகமை ரணஜயபுர ரணவிரு படைவீரர் வீட்டுத் திட்டத்தில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 17) கூட்டமொன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற, ஊனமுற்ற மற்றும் சேவையில் உள்ள முப்படை உறுப்பினர்கள் உட்பட குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு குழுவை நியமிப்பதை நோக்கமாக்க கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் இராணுவ தலைமை பணியாளர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் பணியாளர் ஜெனரல் சையத் ஆமர் ரசா, இன்று (ஜூலை 22) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முகமது பாரூக் சமூகமளித்திருந்தார்.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) இன்று (ஜூலை 21) கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மேத்யூ ஹவுஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் உதவி பாதுகாப்பு ஆலோசகர் சேத் நெவின்ஸ் உடன் இருந்தார்.
தேசிய தொழில்முனைவு மற்றும் புத்தாக்க இயக்கத்தின்
எதிர்காலத்தை பாதுகாப்புத் துறை உருவாக்குகிறது
"தேசிய தொழில்முனைவு மேம்பாடு மற்றும் வணிக தொடக்க-பாதுகாப்பு பங்களிப்பு" என்ற தலைப்பில் உயர் மட்ட மூலோபாய கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூலை 18) பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல், பாதுகாப்புத் துறையின் பலங்களை தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு அமைச்சுகளுக்கு இடையேயான குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பைக் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
யுத்த வீரர் விவகாரங்கள் குறித்த உயர்மட்ட விளக்கக் கூட்டத்தில் நலன்புரி தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்
யுத்த வீரர்கள் விவகாரகள் குறித்த குழுவின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சரவை சமர்ப்பிப்புகள் குறித்த உயர்மட்ட விளக்கக் கூட்டம் இன்று (ஜூலை 18) காலை கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது, இது யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த யுத்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பொது தினத்தன்று யுத்த வீரர்கள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்பங்களின் தேவைகள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு
யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (ஜூலை 16) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
யுத்த வீரர்களை கௌரவித்தல்: பொது தினத்தில் முன்முயட்சி
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (ஜூலை 15) அவரின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில், யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.