செய்திகள்
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தனர்
மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு, நேற்று (செப்டம்பர் 1) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகராவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தது
மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு இன்று (செப்டம்பர் 01) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது.
படை வீரர்களின் நலன் தொடர்பில் உறுதிப்பாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்
குருநாகல், பாங்கொல்லவில் உள்ள அபிமன்சல-3 மற்றும் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல-1 ஆகிய ஊனமுற்ற யுத்தவீரர்களுக்கான பிரத்தியேக நிலையங்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த தினங்களில் செய்தார். இந்த விஜயம் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி மற்றும், ஊனமுற்ற போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.
இரசாயன அச்சுறுத்தல்களைத் தணிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை NACWC நடத்தியது
“சுத்தமான இலங்கை” நிகழ்ச்சிக்கிணங்க இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் (NACWC), பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்களைச் சேர்ந்த 90 சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்ட அரசு அதிகாரிகளின் பங்கேற்புடன், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர கேட்போர் கூடத்தில் இரசாயன அச்சுறுத்தல்களைத் தணிப்பது குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது.
80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டனர்
நேற்று (ஆகஸ்ட் 27) கொழும்பில் நடைபெற்ற 80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்துக் கொண்டனர்.
ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின்
2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்
இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 25) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சீன மக்கள் போர் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) கொண்டாடப்பட்டது.
வியட்நாமின் 80வது சுதந்திர தின நிறைவு விழா, இலங்கை-வியட்நாம் இராஜதந்திர உறவுகளின்55 ஆண்டு நிகழ்வு கொழும்பில் கொண்டாடப்பட்டன
வியட்நாம் சோசலிசக் குடியரசின் 80வது சுதந்திர தின விழா, வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 55வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 19) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைபவ ரீதியாகக் கொண்டாடப்பட்டது.
இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இந்திய தூதகரத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே இன்று (ஆகஸ்ட் 19) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
அமெரிக்காவின் USS SANTA BARBARA கப்பலை பாதுகாப்பு
பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 16) வருகைதந்த USS SANTA BARBARA (LCS) என்ற அமெரிக்க கடற்படையின் போர் கப்பலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பார்வையிட்டார்.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும்
திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
புதிய ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் Colonel Keith Miles, இன்று (ஆகஸ்ட் 14) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயாகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
இலங்கைககான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பொது தினத்தில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் படைவீரர்
குடும்பங்களின் நலனில் கவனம் செலுத்தபட்டது
ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கான பாதுகாப்பு அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பொது தின நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 13) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டம்
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (ஆகஸ்ட் 12) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மனித விற்பனை
அபாயம் குறித்து தேசிய மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) அறிவுறுத்தியுள்ளது
இலங்கை பிரஜைகளை இலக்கு வைத்து புதிய முறையில் மேற்கொள்ளப்படும் மனித விற்பனை நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள் தொடர்பில் மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணி (NAHTTF) பொது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை (2026-2030) பாதுகாப்புச் செயலாளரிடம் IOMனால் கையளிப்பு
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைமைத் தூதர் திருமதி. கிறிஸ்டின் பி. பார்கோ, மனித கடத்தலைக் கண்காணித்து மற்றும் எதிர்த்துப் போராடுவதற்கான 2026-2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை ஆகஸ்ட் 05 அன்று தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இலங்கைக்கு ரூ.400 மில்லியன் பெறுமதியான அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியது
சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேற்படி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது.
AEGIS LEXICON 2025 - பாதுகாப்பு சைபர் கண்காட்சி
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது
பாதுகாப்பு அமைச்சசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு சைபர் கட்டளை (DCC), சமீபத்தில் (ஜூலை 29, 2025) அமைச்சு வளாகத்தில் AEGIS LEXICON 2025 - பாதுகாப்பு சைபர் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியது. ஆகஸ்ட் 03, 2023 அன்று நிறுவப்பட்ட DCC யின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வருடாந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இது டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களில் இலங்கையின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.