--> -->

சிகிரியாவில் உள்ள விமானப்படை வீரர்கள் இரத்ததானம்

ஜனவரி 20, 2021

அவசர காலங்களில் தேவைப்படும் இரத்த மாதிரிகளின் இருப்புக்களை நிரப்புவதற்காக சிகிரியாவில் உள்ள விமானப்படை வீரர்கள் அண்மையில் இரத்ததானம் செய்தனர்.

கப்பூவத்தை ஸ்ரீ ஆனந்தராம விகாரையின்  விகாராதிபதி வண. பெரலபனதர மெதன்கர தேரரின்  வேண்டுகோளை அடுத்து சிகிரியா விமானப்படை நிலைய கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

மாத்தளை  மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்வில் சேவையில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையான சேவை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது