--> -->

செயலாளர் பெல்லன்வில பெரஹர உத்சவத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த விஷேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 23, 2019

எதிர்வரும் பெல்லன்வில பெரஹர உத்சவத்திற்கான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடும் விஷேட கூட்டம் ஒன்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்ட், 23 ) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு வருகைதந்த அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு திட்டம் குறித்து கலந்துரையாடியதுடன், மேலும், பெரஹேரா காலத்தில் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்க உத்தரவு பிறப்பித்தார்.