--> -->

கஜபாகு சுப்பர்குரொஸ் – 2019 மோட்டார் சைக்கிள் போட்டி சாலியபுரயில்

செப்டம்பர் 01, 2019

இலங்கை இராணுவத்தின் கஜபாகு படைப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த “கஜபாகு சுப்பர்குரொஸ் – 2019” எனும் விருவிருப்பான மோட்டார் சைக்கிள் போட்டி அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கஜபாகு படைப் பிரிவின் சுப்பர்குரொஸ் ஓடுதளத்தில் இன்று (செப்டம்பர், 01) நடைபெற்றது.

இலங்கை ஆட்டோஸ்போர்ட் ஓட்டுனர்கள் சங்கத்தின் ஒத்துளைப்புடன் இடம்பெற்ற இம்மோட்டார் சைக்கிள் போட்டியானது, நாட்டின் பிரதான மோட்டார் சைக்கிள் போட்டி நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இன்று காலை கஜபாகு ரெஜிமென்ட்டின் ஓடுதளத்தில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொடியை அசைத்து முதல் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வருட போட்டியின் 24 நிகழ்வுகளில் சுமார் 200இற்கு மேற்பட்ட மோட்டர் கார் மற்றும் மோட்டர் சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.