--> -->

இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு ஏஐஏ மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நன்கொடை

மே 18, 2020

வரையறுக்கப்பட்ட ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின்
கேகாலை கிளையினால் ரூ. 500,000 , இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே,18) இடம்பெற்ற வைபவத்தில் கேகாலை ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின்
சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் திரு. சன்ன துனுசிங்கவினால் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இந்த நன்கொடை நிதி கையளிக்கப்பட்டதாக சன்ன துனுசிங்க பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கேகாலை கிளையினால் ரூ. 200,000 பெறுமதியான காசோலை ஒன்றும் இந்த நிகழ்வின்போது பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.