--> -->

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மே 22, 2020

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் இப்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65கிலோமீற்றர் வேகத்துடன் கூடிய பலமான காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதனால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.