--> -->

லெப்டினென்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 28 வது ஆண்டு நினைவுதினம்:

ஆகஸ்ட் 08, 2020

தூரநோக்கு கொண்ட மரியாதைக்குறிய தளபதி

 

 

இலங்கையர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் மாபெரும் ஒரு வீரனாக இலங்கையின் வரலாற்று ஏடுகளில் பொன்னான எழுத்துக்களில் எழுதப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, 28 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் (ஆகஸ்ட், 08) வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

தாய் நாட்டுக்காக உயிர் நீத்த மாபெரும் வீர நாயகனின் 28வது நினைவு தினம் இன்றாகும்.

1940 இல் பிறந்த ஜெனரல் கொப்பேகடுவ , கண்டி புனித திரித்துவ கல்லூரியில் தனது கல்வியை நிறைவு செய்தார். 1960ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

ஆரம்ப கட்ட பயிற்சி நெறியினை இராணுவ பயிற்சி கல்லூரியில் வெற்றிகரமாக பூர்த்தி செய்த அவர், பிரித்தானியாவில் உள்ள சேன்ட்ஹர்ஸ்ட் இராணுவ அகடமியில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவருக்கு 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இலங்கை கவசப் படையணியின் இரண்டாம் நிலை லெப்டினனாக ஆணையதிகாரம் அளிக்கப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ, வட பகுதியில் இடம் பெற்ற வடமராட்சி படை நடவடிக்கை மற்றும் பலவேகய படைநடவடிக்கை உள்ளிட்ட படை நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் பல வெற்றிகளைப் பெற காரணமாக அமைந்தவர்.

இவர் யாழ் குடா நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த 'பைனல் கெளன்டௌன் படை நடவடிக்கை' தொடர்பாக சென்றிருந்த வேளை பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

 

1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி யாழ்பாணம், பருத்தித்துறை அரலி முனையில் இடம்பெற்ற துயர்மிகு சம்பவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவுடன் இணைந்து மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமக, லெப்டினன்ட் கேர்ணல் எச். ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கேர்ணல் ஜீ. எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேர்ணல் வை. என். பலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேர்ணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் இராணுவ சிப்பாய் டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோர் உயிரிழந்தனர்

போரியல் வரலாற்றில் அழியாத அடையாளத்தை வெளிப்படுத்திய ஒரு துணிச்சலான இராணுவத் தலைமைத்துவத்தைக் கொண்ட அவர், ரண விக்ரம பதக்கம், வடமராச்சி நடவடிக்கை பதக்கம், விஷிஸ்டா சேவா விபூஷனய, ரண சூர பதக்கம் (இரண்டு முறை), உத்தம சேவ பதக்கம் மற்றும் தேச புத்ர சம்மானய ஆகிய வீர பதக்கங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.

ஒரு வீர நாயகனாகவும் சிறந்த அதிகாரியாகவும் மிளிர்ந்த இவர் மரணத்திற்குப் பின் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.