--> -->

நாட்டில் 13,224 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக

ஜனவரி 12, 2021

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 569 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,951ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும்  களுத்தறை மாவட்டத்தை சேர்ந்த 110 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த  88 பேரும், கேகாலை   மாவட்டத்தைச் சேர்ந்த 52 பேரும்,   ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 318  பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை  மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45,164 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 39,333 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 13,224 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளி நாடுகளிலிருந்து 434 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 311 பேர் கட்டாரிலிருந்தும், 76 பேர் மாலைதீவிலிருந்தும், 46 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும்  வருகைதந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் இராணுவத்தினால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 766  பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,090 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  6,621 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன்  படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,267 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான  மேலும் எட்டுப்பேர்  உயிரிழந்ததை அடுத்து  வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளது.