--> -->

அம்பாரை ஹாட்லி கல்லூரியின் இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றம்

மே 11, 2021

400 படுக்கைகளைக் கொண்ட கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக அம்பாறை ஹாட்லிக் கல்லூரி இராணுவத்தினர் மாற்றி அமைத்துள்ளனர்.

வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேவைகள் கருதிஅதற்கு தயாராக இருக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடைநிலைப் பராமரிப்பு மையத்தினை நிர்மாணிக்கும் பணிகளும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய கிழக்கு பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றது.