பாதுகாப்பு செய்திகள்
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்
நல்லிணக்க மேம்பாட்டு திட்டம்
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பிரதேச சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் 2024 மார்ச் 30 அன்று 'மொழியூடான நல்லிணக்கம்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய நீர்வரைவியல் சபைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
தேசிய நீர்வரைவியல் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 1) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிக்கு கென்யாவில் இராணுவ மரியாதை
கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகொல்லாவின் அழைப்பின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
வெப்ப எச்சரிக்கைக்கு மத்தியில் நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (மார்ச் 28) காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று கொழும்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மற்றும் இலங்கை கடற்படை (SLN) இணைந்து நடத்தும் இரண்டு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமாகி யதாக கடற்படை ஊடகம் தெரிவிக்கிறது.
எங்களுக்கு உலகளாவிய பொறுப்பு உள்ளது - இராஜாங்க அமைச்சர் தென்னகோன்
நாட்டிற்குள் இயற்கை மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு முகங்கொடுக்க சரியான திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அத்துடன் இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் பிற நாடுகளுக்கு உதவுவதற்கான திறனை நாம் உருவாக்குவது அவசியமாகும்.
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கான இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கு உணர்த்துவதற்காக இரசாயன ஆயுதங்கள் மாநாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இன்று (மார்ச் 26) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அதிமேதகு Dewi Gustina Tobing இன்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
பாதுகாப்புச் தலைமையக கட்டிட தொகுதிக்கு
பாதுகாப்பு செயலாளர் கண்காணிப்பு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான கண்காணிப்பு வியமொன்றினை இன்று மார்ச் 25 ஆம் திகதி மேற்கொண்டார்.
நாமினிஓயா மொண்டி கொபல்லாவ மாதிரி ஆரம்பப் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண சபையின் 7.6 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வில்கமுவ நாமினிஓயா மொண்டி கொபல்லாவ மாதிரி ஆரம்பப் பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டிடம் இன்று (மார்ச் 25) இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
யாழ். விவசாயிகளுக்கு 235 ஏக்கர் காணி கையளிப்பு
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 235 ஏக்கர் காணியை 2024 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது இலங்கை இராணுவம் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ வீரர்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் - பாதுகாப்பு செயலாளர்
யுத்த காலத்தில் ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் அவர்களது வாழ்நாள் முழுவதும் சம்பளம் வழங்குவது மற்றும் போர்வீரர்கள் மற்றும் ஊனமுற்ற போர்வீரர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் நாட்டுக்காக தனது உயிரையும், உறுப்பையும் தியாகம் செய்தவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட சில நலத்திட்டங்களாகும்.
இலங்கையின் சமகால தேசிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஆயுதப்படைகள் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் 'கற்கை நெறி இலக்கம் 18' மாணவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் புதன்கிழமை (மார்ச் 20) விரிவுரையாற்றினார்.
இந்தியாவில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் மூலோபாய செயலமர்வில் கேர்ணல் நளின் ஹேரத்தினால் விஷேட சொற்பொழிவு
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் திணைக்களம் (DDSS) மற்றும் மேம்படுத்துதல் மூலோபாய ஆய்வுகளுக்கான மையம் (CASS) ஆகியவற்றுடன் இணைந்து சீனா பகுப்பாய்வு மற்றும் மூலோபாயத்திற்கான மையம் (CCAS) ஏற்பாடு செய்த 3வது பாதுகாப்பு மற்றும் மூலோபாய மாநாடு இந்தியாவின் புனே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் (SPPU) சாந்த் தியானேஷ்வர் மண்டபத்தில் மார்ச் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்றது.