பாதுகாப்பு செய்திகள்
மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால அவர்களுக்கு மனிதஉரிமை தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்
நிதி முகாமை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க "உலக மனிதஉரிமை தலைமைத்துவ விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முத்தரப்பு கடலோர காவல் கடற்படை பயிற்சி ‘EX – DOSTI – XVI’ இல் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டது
‘EX – DOSTI – XVI’ முத்தரப்பு கடற்படைப் பயிற்சி 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மாலத்தீவு கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன், இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர இதில் பங்கேற்பதற்காக இன்று (20 பெப்ரவரி 2024) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
இலங்கை ஆயுதப்படைகள் சர்வதேச இராணுவ பேரவை ஓட்டத்துடன்
உலக இராணுவ தின கொண்டாட்டம்
சர்வதேச இராணுவ தினத்தினை முன்னிட்டு 2024 பெப்ரவரி 18 ஆம் திகதி சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்போட்டியில் 300 க்கும் மேற்பட்ட முப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில் அவர்களின் தலைமையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐஆர்ஐஎன்எஸ் ரோன்ப்’க்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, சனிக்கிழமை (பெப். 17) ஈரானிய கடற்படைக் கப்பல் (ஐஆர்ஐஎன்எஸ்) ‘ரோன்ப்’க்கு விஜயம் செய்தார்.
கேர்ணல் திலிப சேரசிங்க எழுதிய 'யுக யுக' புத்தக வெளியீட்டு விழாவில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
இராணுவ பொலிஸ் படையணியின் கேர்ணல் திலிப சேரசிங்க அவர்களினால் எழுப்பட்ட ‘யுக யுக’ எனும் புத்தக வெளியிட்டு விழா நேற்று (பெப்ரவரி. 9) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், இன்று (பெப். 8) இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 வது குழு தென் சூடானுக்கு
இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10 வது குழு தென் சூடான் ஐக்கிய நாட்டின் தரம் – 2 வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இன்று (06 பெப்ரவரி) அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு செயல்படும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 07) பொது பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இராணுவத்தின் பிரதம அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரீந்திர பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (பெப்ரவரி 07) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தார்.
பாடசாலை மானவர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையினர் உதவி
இலங்கை கடற்படையினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
கிளிநொச்சி பாடசாலை மானவர்களுக்கு இராணுவத்தினர் உதவி
இலங்கை இராணுவத்தினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கு தேவையான காலணிகள் உள்ளிட்டவை அண்மையில் வழங்கப்பட்டன.
தென் சூடான் 9வது இலங்கை பாதுகாப்பு குழு நாடு திரும்பல்
தென் சூடான் நிலை - 02 மருத்துவமனையில் தங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள 9வது இலங்கைப் மருத்துவக் குழுவின் 09 அதிகாரிகள் மற்றும் 43 படையினர் (பெப்ரவரி 05) காலை நாடு திரும்பினர்.