பாதுகாப்பு செய்திகள்
வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆட்களைக் கடத்தல் (TIP) அறிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டாவது நிலையை அடைந்து இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விசேட பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில் ஆரம்பம்
சந்தஹிரு மஹா சே பொசன் வலயத்தின்’ ஆரம்ப நிகழ்வு (ஜூன் 21) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர புனித நகரத்தில் உள்ள சந்தஹிரு சேயா ஸ்தூபி வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விசேட பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில் ஆரம்பம்
பொசன் பௌர்ணமி தினமான இன்று (ஜூன் 21) தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் போரில் காயமடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கவும், அத்துடன் அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுகள் அநுராதபுரம் சந்தஹிரு சேயவில் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் 'சுரக்ஷா' கப்பலுக்கான 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப் பாகங்கள் கையளிப்பு
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியக் கடலோரப் பாதுகாப்பு படையின் கப்பல் 'சாசெட்' கடந்த புதன்கிழமை (ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் இரகசிய அறைகளில் மறைக்கப்பட்டுள்ள 3250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
இலங்கை கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர், தெவுந்தர இருந்து தெற்கு திசைக்கு சுமார் 356 கடல் மைல் (சுமார் 700 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹு கப்பல் மூலம் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் காலி துறைமுகத்தில் மேற்படி மீன்பிடி கப்பலை சோதனை செய்த போது குறித்த கப்பலின் கவனமாக தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3250 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் 131 கிலோ 754 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலி துறைமுகத்தில் குறித்த போதைப்பொருளை பார்வையிட்டார்.
ஜனாதிபதி அவர்களின் ஹஜ் வாழ்த்துச் செய்தி
ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
"2024 இல் இலங்கையின் பொருளாதார பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்" எனும் தொனிப்ப பொருளில் வட்டமேசை கலந்துரையாடல்
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) “2024 இல் இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு – கண்ணோட்டம் மற்றும் அபாய மதிப்பீடு செய்தல்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த வட்டமேசை கலந்துரையாடல் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் நந்திமித்ர கேட்போர்கூடத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 06) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களுக்கு
சேவா வனிதா பிரிவினால் நிதி உதவி
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) நிதியுதவி வழங்கியது.
செய்தி வெளியீடு
KDU பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பதவியணியின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் மற்றும் இலங்கை மருவத்துவ சங்கத்தையும் அவதானிப்பாளர்களாக பிரதிநிதிப்படுத்திய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு நேர்முகப் பரீட்சைக் குழு KDU இன் முகாமைத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆராயும் 6வது நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது
ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் வகையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வு இன்று (ஜூன் 08) மின்னேரிய காலாட்படை பயிற்சி முகாமில் இடம்பெற்றது.
முப்படைகளின் இராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் ஆட்கடத்தல் பாடத்தையும் அறிமுகப்படுத்த தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு திட்டமிட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
மேலும், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு திட்டங்களில் ஆயுதப்படைகளின் ஈடுபாடு, எங்கள் விரிவான ஆட்கடத்தல் எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
செய்தி வெளியீடு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலகை்கழகத்தின் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலகை்கழகம் தெளிவுபடுத்துகிறது.
இலங்கை கடற்படையின் 1000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO)
வெற்றிகரமாக நிறுவப்பட்டது
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் 1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO) நேற்று (ஜூன் 05) கல்கமுவ, பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவியுள்ளது.






















