--> -->
Tamil
'தீ மற்றும் மீட்புப் பயிற்சி' இலங்கை விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றன
பிரபல எழுத்தாளர் ஜே.எப்.ரஞ்சித் பெரேரா எழுதிய ‘விடுதலையின் போர்வையில் பிரபாகரனின் இரக்கமற்ற பயங்கரவாதம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை (டிசம்பர் 15) கொழும்பில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் குருநகர் கடல் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (டிசம்பர்15) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 181 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (12) கொழும்பு மெனிங் டவுன் மாதா வீதியில் அமைந்துள்ள செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்திற்கு (SERRIC) விஜயமொன்றை மேற்கொண்டார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 14) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
இந்திய கடற்படைக் கப்பல் (INS) சஹ்யாத்ரி இன்று காலை (13 டிசம்பர் 2022) முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 வது காலாட் படைப்பிரிவின் 661 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் நன்கொடையாளரின் அனுசரணையுடன் செல்லிபுரம் கொல்லகராச்சி கிராம சேவை பிரிவில் முறையான வீடு இல்லாத குடும்பத்திற்கு 3 டிசம்பர் 2022 அன்று அவருக்கான புதிய வீட்டை நிர்மாணித்து பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (08) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவத்தின் ‘சேவா அபிநந்தன பிரணாம’ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (டிசம்பர் 09) பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் நடைபெற்றது.
பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரொலாண்டோ பி கோமஸ் இன்று (டிசம்பர் 09) பத்தரமுல்ல அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இராணுவத் போர்க்கருவி படையணி இராணுவ தயாரிப்புகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெருந் தொகை அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையிலும், இராணுவ போர்க்கருவி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கத்திலும் இராணுவ ஆயுதக் கைத்தொழில் சாலை இடம் மாற்றப்பட்டு இன்று காலை (8) திறந்து வைக்கப்பட்டது. வேயங்கொட மத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியசாலை வளாகத்தில் இலங்கை இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025' க்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய கணிப்புகளின்படி, நாடு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என முன்னறிவிப்பு விடுத்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு வடகிழக்கே 300 கி.மீ. அளவில்) சூறாவளியான “மண்டூஸ்” புயல் நாளை (டிசம்பர் 09) நள்ளிரவு தென்மேற்கு வங்கக்கடல் ஊடாக மேற்கு-வடமேற்கு திசைகளில் நகரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இன்று (டிசம்பர் 08) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் 457வது அமர்வு டிசம்பர் 03 அன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) நடனம் மற்றும் இசைக் குழுக்கள் ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (APIIT) மாணவர் கழகத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட 'TANTALIZE-2022' பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான திறமைப் போட்டியில் மூன்று முக்கிய பிரிவுகளில் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அப்துல்லாயா ட்ரேரோ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவான் தகர்யான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
போர்க்களத்தில் வெற்றி தோல்வி என்பது போரின் பின்னணியை புரிந்து கொண்டு வெற்றியை தொடரும் துணிச்சலான தலைவரை பொறுத்தே அமையும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.