பாதுகாப்பு செய்திகள்
மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ். பொன்சேகா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜனவரி 25) கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
மேற்கு பாதுகாப்பு 300 படையினரால் இரத்த தானம்
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் 300 படையினரால் திங்கட்கிழமை (23) பனாகொடை ஸ்ரீ போதிராஜராமயில் இடம் பெற்ற இரத்த தான நிகழ்வில் நோயாளர்களின் நலன் கருதி இரத்த தானம் வழங்கப்பட்டது.
நந்திக்கடல் மாணவர்களுக்கு இராணுவம் பூப்பந்து மைதானத்தை பரிசாக வழங்கியது
நந்திக்கடல் மாந்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பூப்பந்து ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை வேண்டுகோளின் பேரில் 652 வது காலாட் பிரிகேட் படையினர் பூப்பந்து மைதானத்தை நிர்மாணித்து புதன்கிழமை (ஜன. 18) திறந்து வைத்தனர்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு செயல்திட்ட கண்காட்சி நடைபெற்றது
பொறியியல் பீடத்தின் ஆராய்ச்சி பிரிவு (EFRC) ஏற்பாடு செய்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு செயல்திட்ட கண்காட்சி (FYPE) அண்மையில் பொறியியல் பீடத்தில் நடைபெற்றது.
CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப்
பயிற்சிகள் தொடங்கியது
CARAT– 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மரைன் பயிற்சி (Marine Exercise - MAREX) 2023 ஜனவரி 21 ஆம் திகதி அமெரிக்க மரைன் படைப்பிரிவு, இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு,
ரதெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான மக்களை மீட்பதற்கு இராணுவம் உதவியது
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது காலாட் பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (20) மாலை 7.00 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் வீதியில் ரதெல்ல பிரதேசத்தில் தரம் 10 மாணவர்கள் 41 பேர் ஆசிரியர்கள் 8
இரத்தினபுரியில் 'அபி வெனுவென் அபி' திட்டத்தின் நிதி உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட வீடு யுத்தவீரர் குடும்பத்திற்கு கையளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் ‘அபி வெனுவென் அபி’ நிதியத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி 21ஆம் திகதி இரத்தினபுரி அலுபொல, வேவல்வத்தையில் இடம்பெற்றது.
அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலைப் பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்
கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 20) விஜயம் செய்தார்.
தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
தேசிய மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா இன்று (ஜனவரி 20) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியில்
கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க கல்லூரியின் கேட்போர் கூட கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாண ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
2,467 கிலோ பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடலோரக் காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2,467 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சு பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று (ஜனவரி 17) பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது.
கர்னல் நளின் ஹேரத்தின் புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கர்னல் நளின் ஹேரத் எழுதிய " “STORY OF THE WORLD: Geopolitical Alliances and Rivalries Set in Stone” " என்ற புத்தகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாலர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களும் கலந்துக் கொண்டார்.
நாட்டில் பல இடங்கள் மலையுடன் கூடிய காலநிலை
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன. 17) காலை வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கைக்கமைய, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் டெல்லி' கப்பலானது திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐஎன்எஸ் டெல்லி" என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (ஜனவரி15 ) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.