செய்திகள்
இலங்கை இராணுவம், கடற்படையினர் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைககளில் மும்முரம்
தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் பல மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஈடுபடுத்தியுள்ளன.
ஆழ்கடலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆறு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கிமீ) தொலைவில் உள்ள ஆழ் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின்
இராஜாங்க அமைச்சர் தென்னகோன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (ஜூன் 02) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் போர்வீரர் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான மற்றுமொரு நிகழ்ச்சித் திட்டம்
ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் வகையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வு இன்று (ஜூன் 02) குருவிட்டவில் உள்ள இலங்கையின் இராணுவ கெமுனு வோச் படைப்பிரிவு முகாமில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் போர்வீரர் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் நிகழ்ச்சி திட்டம்
- தாய்நாட்டின் அமைதிக்காக தம் இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் காயங்களுக்கு உள்ளான போர்வீரர்களின் சேவைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் தியாகங்கள் என்றென்றும் எங்கள் நினைவில் இருப்பதுடன் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
பாதுகாப்பு அமைச்சின் புதிய மேலதிக செயலாளராக (பாதுகாப்பு)
ஹர்ஷ விதானாராச்சி நியமனம்
பாதுகாப்பு அமைச்சின் புதிய மேலதிகச் செயலாளராக (பாதுகாப்பு) திரு.ஹர்ஷ விதானாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று (மே 31) பெற்றுக்கொண்டார்.
தேசிய மாணவ படையணியினருக்கு நிதி கல்வி தொடர்பான
பாடத்தை உள்வாங்க நடவடிக்கை
தேசிய மாணவ படையணியினருக்கு (NCC) அவர்களது பாடத்திட்டத்தில் நிதி கல்வியறிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
Tamil
துப்பாக்கி சுடும் விளையாட்டு யூடியூப் சேனலின் தொடக்க நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
‘Scorpion Top Shot’ யூடியூப் சேனலின் தொடக்க நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Tamil
தற்போது நாட்டில் நிலவும் பருவமழை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையானது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு) அவர்கள் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான விடயம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்
காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை மேலும் தொடரும்.
நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவ ஏற்பாடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இன்று (மே 27) கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
Tamil
இந்த வருடத்தின் விஷேட வெசாக் கொண்டாட்டங்களில் ஒன்றான ‘தியவன்னா வெசாக் வலயம் 2024’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
பாதுகாப்பு அமைச்சினால் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024ஆம் ஆண்டுக்கான தியவன்னா வெசாக் வலயம் நிகழ்வுகள் மே 23 முதல் மூன்று நாட்கள் நடைபெற்று நேற்று மாலை (மே 25) நிறைவடைந்தது.
இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024யினை பெருமளவிலான மக்கள் கண்டுகளித்தனர்
தியவன்னா வெசாக் வலயம் 2024 இன்று (மே 25) தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதியை உள்ளடக்கி இன்று மாலை ஆரம்பமானது. கடந்த இரண்டு நாட்களாக வெசாக் வலயத்திற்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளனர்.
தியவன்னா வெசாக் வலயம் 2024' இரண்டாவது நாளாக தொடர்கிறது
Tamil
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு நிலையத்தில் இன்று (மே 24) விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளரினால் தியவன்னா வெசாக் வலயம் 2024 திறந்து வைப்பு
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரினால் இன்று (மே 23) மாலை 'தியவன்னா வெசாக் வலயம் 2024' ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'புத்த ரஷ்மி' வெசாக் பண்டிகையை ஒட்டி இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெசாக் தின செய்தி
வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.
Tamil
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிய தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திறந்து வைத்தார்
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலைமையக கட்டிடம் இன்று (மே 22) பத்தரமுல்ல அக்குரேகொடவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.