--> -->

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜனவரி 25, 2019

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகிர சுகியாமா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,25 ) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சினேக பூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

அத்துடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இச் சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் இணை செயலாளர்/ பாதுகாப்பு ஆலோசகர் திரு. அட்சுஹிரோ மோரோய் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.